என்ஜினீயரிங் மாணவர்களின்
விடைத்தாள்களை மதிப்பீடு செய்ய புதிய முறை
துணைவேந்தர் ராஜாராம் பேட்டி
சென்னை, செப்.3:-
தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து என்ஜினீயரிங் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களின் விடைத்தாள்கள் அனைத்தும் மதிப்பீடு செய்ய புதிய முறை வருகிற செமஸ்டர் முதல் அமல்படுத்தப்படுகிறது என்று அண்ணாபல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் எம்.ராஜாராம் தெரிவித்தார்.
தமிழ்நாடு முழுவதும் அரசு என்ஜினீயரிங் கல்லூரிகள், அரசு உதவி பெறும் என்ஜினீயரிங் கல்லூரிகள், சுயநிதி என்ஜினீயரிங் கல்லூரிகள் ஆகியவை சேர்த்து மொத்தம் 554 கல்லூரிகள் உள்ளன.
இந்த கல்லூரிகளில் பி.இ., பி.டெக்., எம்.இ., எம்.டெக். எம்.பி.ஏ., எம்.சி.ஏ. உள்ளிட்ட பல படிப்புகளை 7 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படிக்கிறார்கள்.
படிக்கின்ற மாணவர்களில் சில கல்லூரிகளில் மாணவர்கள் என்ன மார்க் எடுத்தாலும் உள் மதிப்பீடு மதிப்பெண்(இன்டர்னல் மார்க்) 20-க்கு 20 போட்டுவிடுகிறார்கள். ஆனால் சில கல்லூரிகளில் மாணவர்கள் எடுக்கின்ற மார்க்கை போடுகிறார்கள். அதனால் நன்றாக படிக்கும் மாணவர்களைவிட ஒன்றும் படிக்காத மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்றுவிடுகிறார்கள்.
மேலும் பருவமுறை தேர்வில் (செமஸ்டர்தேர்வு) விடைத்தாள் மதிப்பீட்டில் ஒரே விடைத்தாளை மதிப்பீடு செய்வதில் ஆசிரியருக்கு ஆசிரியர் 5 மார்க் வித்தியாசப்படலாம். ஆனால் அப்படி அல்லாமல் 100-க்கு 90 மதிப்பெண்ணுக்கு தேர்வு எழுதிய மாணவருக்கு மதிப்பீடு செய்து 60 மதிப்பெண் கிடைக்கிறது.
60 மதிப்பெண்ணுக்கு எழுதிய மாணவருக்கு 60 மதிப்பெண் கிடைத்துவிடுகிறது.
இப்படி மதிப்பீடு செய்வதில் நிறைய வித்தியாசம் வருவதால் மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள்.
எனவே விடைத்தாள் மதிப்பீடு செய்ய அண்ணா பல்கலைக்கழகம் புதிய முறையை கொண்டுவருகிறது. அதாவது விடைத்தாள் திருத்தும் ஆசிரியர் கையில் கேள்விகளையும் அதற்கான விடைகளையும் கொடுத்துவிட உள்ளது.
இது குறித்து அண்ணாபல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் எம்.ராஜாராமிடம் கேட்டதற்கு அவர் அளித்த பதில் வருமாறு:-
தமிழ்நாடு முழுவதும் என்ஜினீயரிங் கல்லூரிகளில் பட்டதாரிகள், முதுநிலை பட்டதாரிகள் உள்பட மொத்தம் 7 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படிக்கிறார்கள்.
அவர்களின் நலன் கருதி விடைத்தாள் மதிப்பீடு செய்வதில் அண்ணாபல்கலைக்கழகம் புதிய முறையை அமல்படுத்த முடிவு செய்துள்ளது. மாணவர்கள் விடைத்தாளில் எழுதியதற்கு உரிய மதிப்பெண் பெறவேண்டும் என்பதில் அதிக அக்கறையுடன் அண்ணாபல்கலைக்கழகம் விளங்குகிறது.
விடைத்தாள் மதிப்பீடு செய்வதற்கு போதிய ஆசிரியர்கள் உள்ளனர். தகுதியான ஆசிரியர்கள் உள்ளனர். ஆனால் கீ-ஆன்சர் இல்லாமல் உள்ளதால் விடைத்தாள் மதிப்பீடு செய்வதில் வேறுபாடு வரலாம். இனிமேல் கேள்வி- விடை(கீ-ஆன்சர்) தயார் செய்யப்பட்டு அதாவது கேள்வி எடுப்பவர்களே அதற்கான விடையை தயார் செய்து கொடுக்கவேண்டும்.
அந்த விடையை விடைத்தாள் மதிப்பீடு செய்பவர்களின் கையில் கொடுக்கப்படும். அதனால் அவர்கள் அந்த விடையைக்கொண்டு மதிப்பீடு செய்வார்கள். அதனால் மாணவர்களுக்கு உரிய மதிப்பெண் கிடைக்கும்.
இந்த முறை வருகிற செமஸ்டர் தேர்வில் இருந்து அமல்படுத்தப்படும். இதனால் அனைத்து மாணவர்களும் பயன் அடைவார்கள்.
இவ்வாறு துணைவேந்தர் பேராசிரியர் எம்.ராஜாராம் தெரிவித்தார்
தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து என்ஜினீயரிங் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களின் விடைத்தாள்கள் அனைத்தும் மதிப்பீடு செய்ய புதிய முறை வருகிற செமஸ்டர் முதல் அமல்படுத்தப்படுகிறது என்று அண்ணாபல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் எம்.ராஜாராம் தெரிவித்தார்.
தமிழ்நாடு முழுவதும் அரசு என்ஜினீயரிங் கல்லூரிகள், அரசு உதவி பெறும் என்ஜினீயரிங் கல்லூரிகள், சுயநிதி என்ஜினீயரிங் கல்லூரிகள் ஆகியவை சேர்த்து மொத்தம் 554 கல்லூரிகள் உள்ளன.
இந்த கல்லூரிகளில் பி.இ., பி.டெக்., எம்.இ., எம்.டெக். எம்.பி.ஏ., எம்.சி.ஏ. உள்ளிட்ட பல படிப்புகளை 7 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படிக்கிறார்கள்.
படிக்கின்ற மாணவர்களில் சில கல்லூரிகளில் மாணவர்கள் என்ன மார்க் எடுத்தாலும் உள் மதிப்பீடு மதிப்பெண்(இன்டர்னல் மார்க்) 20-க்கு 20 போட்டுவிடுகிறார்கள். ஆனால் சில கல்லூரிகளில் மாணவர்கள் எடுக்கின்ற மார்க்கை போடுகிறார்கள். அதனால் நன்றாக படிக்கும் மாணவர்களைவிட ஒன்றும் படிக்காத மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்றுவிடுகிறார்கள்.
மேலும் பருவமுறை தேர்வில் (செமஸ்டர்தேர்வு) விடைத்தாள் மதிப்பீட்டில் ஒரே விடைத்தாளை மதிப்பீடு செய்வதில் ஆசிரியருக்கு ஆசிரியர் 5 மார்க் வித்தியாசப்படலாம். ஆனால் அப்படி அல்லாமல் 100-க்கு 90 மதிப்பெண்ணுக்கு தேர்வு எழுதிய மாணவருக்கு மதிப்பீடு செய்து 60 மதிப்பெண் கிடைக்கிறது.
60 மதிப்பெண்ணுக்கு எழுதிய மாணவருக்கு 60 மதிப்பெண் கிடைத்துவிடுகிறது.
இப்படி மதிப்பீடு செய்வதில் நிறைய வித்தியாசம் வருவதால் மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள்.
எனவே விடைத்தாள் மதிப்பீடு செய்ய அண்ணா பல்கலைக்கழகம் புதிய முறையை கொண்டுவருகிறது. அதாவது விடைத்தாள் திருத்தும் ஆசிரியர் கையில் கேள்விகளையும் அதற்கான விடைகளையும் கொடுத்துவிட உள்ளது.
இது குறித்து அண்ணாபல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் எம்.ராஜாராமிடம் கேட்டதற்கு அவர் அளித்த பதில் வருமாறு:-
தமிழ்நாடு முழுவதும் என்ஜினீயரிங் கல்லூரிகளில் பட்டதாரிகள், முதுநிலை பட்டதாரிகள் உள்பட மொத்தம் 7 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படிக்கிறார்கள்.
அவர்களின் நலன் கருதி விடைத்தாள் மதிப்பீடு செய்வதில் அண்ணாபல்கலைக்கழகம் புதிய முறையை அமல்படுத்த முடிவு செய்துள்ளது. மாணவர்கள் விடைத்தாளில் எழுதியதற்கு உரிய மதிப்பெண் பெறவேண்டும் என்பதில் அதிக அக்கறையுடன் அண்ணாபல்கலைக்கழகம் விளங்குகிறது.
விடைத்தாள் மதிப்பீடு செய்வதற்கு போதிய ஆசிரியர்கள் உள்ளனர். தகுதியான ஆசிரியர்கள் உள்ளனர். ஆனால் கீ-ஆன்சர் இல்லாமல் உள்ளதால் விடைத்தாள் மதிப்பீடு செய்வதில் வேறுபாடு வரலாம். இனிமேல் கேள்வி- விடை(கீ-ஆன்சர்) தயார் செய்யப்பட்டு அதாவது கேள்வி எடுப்பவர்களே அதற்கான விடையை தயார் செய்து கொடுக்கவேண்டும்.
அந்த விடையை விடைத்தாள் மதிப்பீடு செய்பவர்களின் கையில் கொடுக்கப்படும். அதனால் அவர்கள் அந்த விடையைக்கொண்டு மதிப்பீடு செய்வார்கள். அதனால் மாணவர்களுக்கு உரிய மதிப்பெண் கிடைக்கும்.
இந்த முறை வருகிற செமஸ்டர் தேர்வில் இருந்து அமல்படுத்தப்படும். இதனால் அனைத்து மாணவர்களும் பயன் அடைவார்கள்.
இவ்வாறு துணைவேந்தர் பேராசிரியர் எம்.ராஜாராம் தெரிவித்தார்
0 comments