சிகரெட்-மது காட்சிகள் இல்லாத படம்
‘என்னை பிரியாதே‘ பட இயக்குனர் பொன். மணிகண்டன் கூறியது: எல்லையை மீறும் நட்பும், காதலுக்குள் நட்பு நுழையும்போதும¢ ஏற்படும் பாதிப்பு என்ன என்பதை சொல்லும் படமிது. கல்லூரி மாணவர்கள் கதை என்றால் புகைபிடிப்பது, மது குடிப்பதுபோன்ற காட்சிகள்தான் பெரும்பாலான படங்களில் இடம்பெறுகிறது.
இப்படத்தில் சிகரெட் புகைப்பது, மது அருந்துவதுபோன்று ஒரு காட்சிகூட வைக்கவில்லை. புதுமுகங்கள் ரத்தன் மவுலி, அமர், ஷாமிலி நாயர், ரம்யா நரசிங்கர் நடிக்கின்றனர். வில்லனாக அதிரவன் நடிக்கிறார். பி.நேருஜி, என்.பார்த்திபராஜன் தயாரிப்பு. பிரம்ம ஸ்ரீரவி ஒளிப்பதிவு. ஏ.எல்.எஸ்.வேலன் இசை.
0 comments