சூர்யாவை இயக்கும் ‘சூதுகவ்வும்’ இயக்குனர் நலன் குமாரசாமி
‘சிங்கம் 2’ படத்தை அடுத்து கௌதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடிக்கப் போவதாக தகவல் வெளியானது. ஆனால் சில காரணங்களால் அந்த படம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
பின்னர், லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடிக்கப் போகிறார் என்றார்கள். ஆனால், லிங்குசாமியின் கதையும், சீமான் இயக்கிவரும் ‘பகலவன்’ கதையும் ஒன்றுபோல இருந்ததால் படமாக்குவதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து, லிங்குசாமி சூர்யாவுக்காக புதிய கதையை தயார் செய்து வருகிறார். திரைக்கதை ரெடியாவதற்கு சில மாதங்களாகும் என்பதால் இந்த படத்திலும் சூர்யா நடிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இயக்குனர் விஜய்யும் சூர்யாவிடம் கதை சொல்லி கால்ஷீட்டை வாங்கி வைத்துள்ளார். ஆனால், விஜய் தற்போது 'தெய்வத் திருமகள்' படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரம் சாராவை வைத்து ‘சேவல்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்துக்கு பிறகுதான் சூர்யாவை இயக்கப்போகிறார் விஜய்.
இதற்கிடையில், ‘சூதுகவ்வும்’ இயக்குனர் நலன் குமாரசாமி சூர்யாவை சந்தித்து கதை சொல்லியிருக்கிறார்கள். சூர்யாவுக்கும் அவர் கூறிய கதை பிடித்துள்ளதாம். இப்படத்தில் நடிப்பதற்கான நடிகர்-நடிகையர் தேர்வும் நடந்து முடிந்துவிட்டதாம். விரைவில் படப்பிடிப்பை துவங்க இருக்கிறார்களாம்.
பின்னர், லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடிக்கப் போகிறார் என்றார்கள். ஆனால், லிங்குசாமியின் கதையும், சீமான் இயக்கிவரும் ‘பகலவன்’ கதையும் ஒன்றுபோல இருந்ததால் படமாக்குவதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து, லிங்குசாமி சூர்யாவுக்காக புதிய கதையை தயார் செய்து வருகிறார். திரைக்கதை ரெடியாவதற்கு சில மாதங்களாகும் என்பதால் இந்த படத்திலும் சூர்யா நடிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இயக்குனர் விஜய்யும் சூர்யாவிடம் கதை சொல்லி கால்ஷீட்டை வாங்கி வைத்துள்ளார். ஆனால், விஜய் தற்போது 'தெய்வத் திருமகள்' படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரம் சாராவை வைத்து ‘சேவல்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்துக்கு பிறகுதான் சூர்யாவை இயக்கப்போகிறார் விஜய்.
இதற்கிடையில், ‘சூதுகவ்வும்’ இயக்குனர் நலன் குமாரசாமி சூர்யாவை சந்தித்து கதை சொல்லியிருக்கிறார்கள். சூர்யாவுக்கும் அவர் கூறிய கதை பிடித்துள்ளதாம். இப்படத்தில் நடிப்பதற்கான நடிகர்-நடிகையர் தேர்வும் நடந்து முடிந்துவிட்டதாம். விரைவில் படப்பிடிப்பை துவங்க இருக்கிறார்களாம்.
0 comments