3 July 2013

ஆசிய தடகள போட்டியில் இந்தியாவுக்கு முதல் பதக்கம்: குண்டு எறிதல் போட்டியில் ஓம்பிரகாஷ் வெண்கலம்

ஆசிய தடகள போட்டியில் இந்தியாவுக்கு முதல் பதக்கம்

 குண்டு எறிதல் போட்டியில் ஓம்பிரகாஷ் வெண்கலம்


புனே, ஜூலை 3:-

ஆசிய தடகள போட்டி புனே நகரில் உள்ள ஷிவ் சத்ரபதி ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, சீனா, ஜப்பான், பக்ரைன், ஈரான், கத்தார், தாய்லாந்து, கொரியா உள்பட 43 நாடுகளை சேர்ந்த 577 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பில் 107 வீரர், வீராங்கனைகள் களமிறங்கியுள்ளனர்.
 
 இன்று நடைபெற்ற ஆடவர் குண்டு எறிதல் போட்டியில் இந்திய வீரர் ஓம்பிரகாஷ் வெண்கலம் வென்று இந்தியாவின் பதக்க கணக்கை தொடங்கினார். இப்போட்டியில் 19.45 மீட்டர் தூரம் குண்டு எறிந்த ஓம்பிரகாஷ் 3-வது இடத்தை பிடித்தார். சவுதி அரேபிய வீரர் முதலிடத்தையும், சீன தைபே வீரர் 2-வது இடத்தையும் பிடித்தனர்.

24 ஆண்டுகளுக்கு பிறகு இந்த போட்டி இந்தியாவில் நடப்பதால் உள்ளூர் சூழல் இந்திய வீரர்களுக்கு சாதகமாக இருக்கும். இந்த போட்டியில் 2 அல்லது 3 இடத்தை பிடிக்கும் இலக்குடன் தயாராகி வரும் இந்தியா 5 தங்கம் உள்பட 15 பதக்கங்கள் வரை வெல்லக்கூடும் என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இதற்கிடையே ஆசிய போட்டிக்கு முன்னதாக இந்திய வீரர்களுக்கு ஊக்க மருந்து சோதனை செய்யப்பட்டதில், குண்டு எறிதல் வீராங்கனை ஒருவர் தடை செய்யப்பட்ட ஊக்க மருந்து பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அவர் போட்டியில் இருந்து நீக்கப்படலாம் எனத் தெரிகிறது.
Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

0 comments

:) :-) :)) =)) :( :-( :(( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ :-$ (b) (f) x-) (k) (h) (c) cheer

 
© 2011 Ramanathapuram 2Day
Designed by FTech Cooperated with S.S.Karthik
Posts RSSComments RSS
Back to top