சென்னையில் கல்லூரி மாணவியை காதலித்து
ஆபாச படம் எடுத்து மிரட்டல்
நுங்கம்பாக்கம் புது தெருவை சேர்ந்தவர் சாமுவேல் (26). அஞ்சல் வழியில் பி.சி.ஏ படித்து வருகிறார். இவர் ஒரு தனியார் கல்லூரி எம்.சி.ஏ. மாணவியை(21) ஒரு ஆண்டாக காதலித்துள்ளார்.
இருவரும் பல இடங்களுக்கு ஜோடியாக பைக்கில் சுற்றியதாக கூறப்படுகிறது.இந்நிலையில் காதலியை தனது வீட்டுக்கு கடந்த வாரம் சாமுவேல் அழைத்து சென்றார்.
அங்கிருந்த சாமுவேலுவின் லேப்டாப்பை அவர் எதேச்சையாக பார்த்துள்ளார். அதில் சாமுவேல், பல பெண்களுடன் ஆபாசமாக இருக்கும் புகைப்படங்கள் இருந்தது.
மேலும் காதலியின் ஆபாச படங்களும் இருந்தன.
மேலும் காதலியின் ஆபாச படங்களும் இருந்தன.
இதைக்கண்டு திடுக்கிட்ட அவர், இதுகுறித்து சாமுவேலிடம் கேட்டார்.
இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த சாமுவேல் இதுகுறித்து வெளியில் சொன்னால் உன்னுடன் நெருக்கமாக உள்ள படங்களை பேஸ்புக்கில் வெளியிடுவேன் என்று காதலியை மிரட்டியுள்ளார்.
மேலும் பணம் கேட்டு மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.இதையடுத்து நுங்கம்பாக்கம் போலீசில் அவர் புகார் செய்தார்.
வழக்கு பதிவு செய்த போலீசார் சாமுவேலை நேற்று கைது செய்தனர்.
மேலும் சாமுவேலுவின் லேப்டாப்பை பறிமுதல் செய்தனர். மேலும் விசாரணை நடக்கிறது.
0 comments