மும்பையில் 4
டெம்போ வாகனங்களில் ரூ.2500 கோடி மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளும், தங்க வைர நகைகளும் பிடிப்பட்டன
மும்பை:
மும்பையில் ரூ.2500 கோடி மதிப்புள்ள தங்கமும், ரூபாய் நோட்டு கட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வருமான வரித்துறை, தேசிய புலனாய்வு கழகம் ஆகியவற்றுக்கு கிடைத்த ரகசிய தகவல்களின்படி மும்பை மத்திய ரயில் நிலையத்தின் அருகே வாகன சோதனை நடத்தப்பட்டது. அப்போது 4 டெம்போ வாகனங்களில் 100க்கும் மேற்பட்ட மூட்டைகள் மற்றும் சூட்கேஸ்களிலிருந்த ரூ.2500 கோடி மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளும், தங்க வைர நகைகளும் பிடிப்பட்டன.
அவற்றை பறிமுதல் செய்த தேசிய புலனாய்வு கழகத்தினர் வேன்களிலிருந்த 47 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இன்று காலை முதல் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. குஜராத் மெயில் மூலம் அகமதாபாத்திற்கு கடத்துவதற்காக இவை கொண்டு வரப்பட்டதாக புலனாய்வு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பறிமுதல் செய்த பணம் எண்ணப்பட்டு வருமான வரித்துறை தலைமைகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்த கடத்தலுக்கு மும்பை காவல் நிலைய ஆய்வாளர் ஒருவர் காவலாக இருந்து வந்து தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
100க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகளும், தேசிய புலனாய்வு அதிகாரிகளும் இந்த சோதனையில் ஈடுபட்டனர். அண்மை காலத்தில் வருமான வரித்துறை நடத்திய மிகப் பெரிய வேட்டை இது என கருதப்படுகிறது.
அவற்றை பறிமுதல் செய்த தேசிய புலனாய்வு கழகத்தினர் வேன்களிலிருந்த 47 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இன்று காலை முதல் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. குஜராத் மெயில் மூலம் அகமதாபாத்திற்கு கடத்துவதற்காக இவை கொண்டு வரப்பட்டதாக புலனாய்வு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பறிமுதல் செய்த பணம் எண்ணப்பட்டு வருமான வரித்துறை தலைமைகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்த கடத்தலுக்கு மும்பை காவல் நிலைய ஆய்வாளர் ஒருவர் காவலாக இருந்து வந்து தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
100க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகளும், தேசிய புலனாய்வு அதிகாரிகளும் இந்த சோதனையில் ஈடுபட்டனர். அண்மை காலத்தில் வருமான வரித்துறை நடத்திய மிகப் பெரிய வேட்டை இது என கருதப்படுகிறது.
0 comments