3 July 2013

முத்தரப்பு கிரிக்கெட் : இந்தியாவுக்கு எதிரான போட்டியில் இலங்கை 348 ரன்கள் குவிப்பு

முத்தரப்பு கிரிக்கெட்
இந்தியாவுக்கு எதிரான போட்டியில்  இலங்கை 348 ரன்கள் குவிப்பு  


 கிங்ஸ்டன், ஜூலை 3:-

முத்தரப்பு கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற போட்டியில் இந்தியா - இலங்கை அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்தியா பந்து வீச்சை தேர்வு செய்தது.

இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தொடர்ந்தது. தொடக்க வீரர்களாக ஜெயவர்தனே மற்றும் தரங்கா விளையாடினார்கள். தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடிய இவர்கள், இந்திய அணியின் பந்து வீச்சை திணறடித்தனர். இவர்கள் ஜோடியில் இலங்கை 213 ரன்கள் சேர்த்தது. சதம் அடித்த ஜெயவர்தனே 107 ரன்களில் ஆட்டமிழந்தார்.

பின்னர் வந்த மேத்யூஸ் தரங்காவுடன் ஜோடி சேர்ந்து விளையாடினார். இறுதியில் இலங்கை அணி 50 ஓவர் முடிவில் 1 விக்கெட்டை மட்டுமே இழந்து 348 ரன்கள் எடுத்தது.

சிறப்பாக விளையாடிய தரங்கா 174 ரன்களுடனும் மேத்யூஸ் 44 ரன்களுடனும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

349 என்ற கடினமான வெற்றி இலக்குடன் 
இந்தியா விளையாடி வருகின்றது.

Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

0 comments

:) :-) :)) =)) :( :-( :(( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ :-$ (b) (f) x-) (k) (h) (c) cheer

 
© 2011 Ramanathapuram 2Day
Designed by FTech Cooperated with S.S.Karthik
Posts RSSComments RSS
Back to top