மறுபிரேத பரிசோதனை முடிவு எடுக்க
இளவரசன் உடலை ஆய்வு செய்வதற்கு
இளவரசன் உடலை ஆய்வு செய்வதற்கு
2 தனியார் மருத்துவமனை டாக்டர்கள்
சென்னை:
தர்மபுரி இளவசரன் உடலை மீண்டும் பிரேத பரிசோதனை நடத்த வேண்டுமா என்பது குறித்து இளவரசனின் உடலை ஆய்வு செய்து அறிக்கை தர சென்னை ராமச்சந்திரா மருத்துவமனை டாக்டர் சம்பத்குமார், எஸ்ஆர்எம் மருத்துவமனை டாக்டர் தங்கராஜ் ஆகியோரை உயர் நீதிமன்றம் நியமித்துள்ளது.
காதல் கலப்பு திருமணம் செய்த தர்மபுரி இளவரசன், கடந்த 4ம் தேதி ரயில் பாதை அருகே இறந்து கிடந்தார். அவரது உடல், தர்மபுரி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கை விசாரித்த ஐகோர்ட், இளவரசன் உடலை பதப்படுத்தி வைக்க உத்தரவிட்டது. அதன்படி, இளவரசன் உடல் தர்மபுரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை வீடியோவை நீதிபதிகள் நேற்று பார்த்தனர்.இந்நிலையில், இளவரசன் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு, உயர் நீதிமன்ற நீதிபதிகள் தனபாலன், சி.பி.செல்வம் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, வக்கீல்கள் சங்கரசுப்பு, பிரசாத் ஆகியோர் ஆஜராகி, ‘‘இளவரசன் பிரேத பரிசோதனை அறிக்கையை படித்து பார்த்தோம். சென்னை அண்ணாநகரை சேர்ந்த டாக்டர் டெய்க்காலின் அறிக்கையில் மீண்டும் பரிசோதனை நடத்த வேண்டும் என்று கூறி உள்ளார். தர்மபுரி அரசு டாக்டர்கள் நடத்திய பிரேத பரிசோதனையில் குறைபாடுகள் உள்ளன என ஜிப்மர் மருத்துவமனை டாக்டர்கள் கூறியுள்ளனர். எனவே, மீண்டும் பிரேத பரிசோதனை நடத்த உத்தரவிட வேண்டும். அப்போதுதான் உண்மை தெரியவரும் என்றனர்.
அப்போது, வக்கீல்கள் சங்கரசுப்பு, பிரசாத் ஆகியோர் ஆஜராகி, ‘‘இளவரசன் பிரேத பரிசோதனை அறிக்கையை படித்து பார்த்தோம். சென்னை அண்ணாநகரை சேர்ந்த டாக்டர் டெய்க்காலின் அறிக்கையில் மீண்டும் பரிசோதனை நடத்த வேண்டும் என்று கூறி உள்ளார். தர்மபுரி அரசு டாக்டர்கள் நடத்திய பிரேத பரிசோதனையில் குறைபாடுகள் உள்ளன என ஜிப்மர் மருத்துவமனை டாக்டர்கள் கூறியுள்ளனர். எனவே, மீண்டும் பிரேத பரிசோதனை நடத்த உத்தரவிட வேண்டும். அப்போதுதான் உண்மை தெரியவரும் என்றனர்.
போலீஸ் தரப்பு வக்கீல் சண்முகவேலாயுதம் வாதிடுகையில், ‘‘மீண்டும் பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிடக் கூடாது. மறு பிரேத பரிசோதனை தேவையில்லை என்று ஜிப்மர் மருத்துவமனை டாக்டர்களும் சென்னை அரசு பொது மருத்துவமனை டாக்டர்களும் கூறியுள்ளனர். எனவே, இதை ஏற்றுக்கொண்டு மீண்டும் பிரேத பரிசோதனை செய்ய உத்தவிடக்கூடாது என்றார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தரப்பில் ஆஜரான வக்கீல் பிரபாகரன், ‘‘போலீஸ் நடத்தும் புலன் விசாரணையின்போது தடய அறிவியல் துறை முன்னாள் இயக்குனர் சந்திரசேகர் உடன் இருக்க வேண்டும். இதற்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தரப்பில் ஆஜரான வக்கீல் பிரபாகரன், ‘‘போலீஸ் நடத்தும் புலன் விசாரணையின்போது தடய அறிவியல் துறை முன்னாள் இயக்குனர் சந்திரசேகர் உடன் இருக்க வேண்டும். இதற்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றார்.
இந்த வாதங்களை கேட்ட நீதிபதிகள், ‘‘மீண்டும பிரேத பரிசோதனை நடத்த உத்தரவிட வேண்டுமா என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய, சென்னை ராமச்சந்திரா மருத்துவமனை டாக்டர் சம்பத்குமார், எஸ்ஆர்எம் மருத்துவமனை டாக்டர் தங்கராஜ் ஆகியோரை இந்த நீதிமன்றம் நியமிக்கிறது. அவர்கள் இருவரும் தர்மபுரி சென்று இளவரசனின் உடலை ஆய்வு செய்து நாளை மறுநாள் (ஜூலை 12) அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அதன் பிறகு மறு பிரேத பரிசோதனை குறித்து முடிவு எடுக்கப்படும்“ என்று உத்தரவிட்டனர்.
0 comments