பெட்ரோல் விலை ரூ. 1.55 காசுகள் உயர்வு: இன்று நள்ளிரவு முதல் அமல்
புதுடெல்லி, ஜூலை 14:
இந்திய எண்ணெய் கம்பெனிகள் பெட்ரோல் விலையை ரூ. 1.55 காசுகள் உயர்த்துவதாக அறிவித்துள்ளன. இந்த விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. ஆனால், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை.
இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை எண்ணெய் கம்பெனிகள் விலையேற்றம் குறித்து பரீசிலனை செய்கின்றன. அதனடிப்படையில், தற்போதைய சர்வதேச எண்ணெய் சந்தைகளில் கச்சா எண்ணெய்களின் விலையில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பை அடிப்படையாக கொண்டு இந்த உயர்வு கொண்டுவரப்பட்டுள்ளது.
சென்ற மாதம் மட்டும் பெட்ரோல் விலையில் முன்று முறை விலையேற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
0 comments