இன்று சே குவேராவின் பிறந்தநாள் நினைவுக்கூரப்படுகிறது
சேகுவேராவின் 85 வது பிறந்த நாள் உலகின் பல்வேறு நாடுகளில் இன்று நினைவுகூறப்பட்டது.
பொலிவியா நாட்டில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. சேகுவேராவைப் பற்றிய ஆவணப்படமும் திரையிடப்பட்டது.
இதேபோல கியூபா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் பிறந்த நாள் நினைவுகூறப்பட்டது.
சே என பிரியமுடன் அழைக்கப்படும் எர்னெஸ்டோ குவேரா டி லா செர்னா (Ernesto Guevara de la Serna) அர்ஜென்டீனாவை பிறப்பிடமாகக் கொண்ட மருத்துவர், மார்க்சியவாதி, அரசியல்வாதி. கியூபா மற்றும் பல நாடுகளின் புரட்சிகளில் பங்குபெற்றவர்.
இவர் ஒரு சிறந்த "ரக்பி" விளையாட்டு வீரரும் கூட. பிடல் காஸ்ட்ரோவின் இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்ட சே குவேரா, பின்நாளில் கியூப அரசியலில் பல முக்கிய பொறுப்புகளை வகித்து வந்தார்.காங்கோ-கின்ஸாசா (தற்போது கொங்கோ ஜனநாயகக் குடியரசு) மற்றும் பொலிவியா போன்ற நாடுகளின் சோசலிசப் போராட்ட வளர்ச்சிகளில் சேவின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.
0 comments