மண்டேலா உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்
மருத்துவமனையில் பாதுகாப்பு அதிகரிப்பு
ஜோகன்னஸ்பர்க்:
தென்ஆப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவுக்கு நுரையீரல் பாதிக்கப்பட்டது. இதனால், சுவாசக் கோளாறு ஏற்பட்டு, கடந்த மார்ச் மாதம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். உடல் நலம் தேறிய அவர் ஏப்ரல் 6-ம் தேதி ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பினார்.
உடல் நிலையை கருதி, பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் ஓய்வெடுத்து வந்த அவருக்கு கடந்த 8-ம் தேதி அதிகாலை மீண்டும் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதனையடுத்து, பிரிட்டோரியா ஆஸ்பத்திரியில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. இருப்பினும் அபாய கட்டத்திற்கு செல்லவில்லை என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.
அவர் உடல்நலம் பெற வேண்டி தென் ஆப்பிரிக்க மக்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர். ஆனால், அவரது உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. 4-வது நாளாக தீவிர சிகிச்சைப் பிரிவில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் மருத்துவமனையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
அனைத்து வாயில்களிலும் தடுப்பு கட்டைகள், வேலிகள் அமைக்கப்பட்டு, வாகனங்கள் தீவிரமாக சோதனை செய்யப்படுகின்றன. இதற்கிடையே அதிபர் ஜேக்கப் ஜூமா நேற்று மருத்துவக் குழுவினரை சந்தித்து, மண்டேலாவின் உடல்நிலை குறித்தும் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை பற்றியும் கேட்டறிந்தார். மண்டேலாவுக்கு டாக்டர்கள் சிறந்த சிகிச்சை அளித்து வருவதாகவும், அவர்கள் மீது அதிபர் முழு நம்பிக்கை வைத்திருப்பதாகவும், அதிபர் மாளிகை செய்தி வெளியிட்டுள்ளது.
உடல் நிலையை கருதி, பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் ஓய்வெடுத்து வந்த அவருக்கு கடந்த 8-ம் தேதி அதிகாலை மீண்டும் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதனையடுத்து, பிரிட்டோரியா ஆஸ்பத்திரியில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. இருப்பினும் அபாய கட்டத்திற்கு செல்லவில்லை என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.
அவர் உடல்நலம் பெற வேண்டி தென் ஆப்பிரிக்க மக்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர். ஆனால், அவரது உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. 4-வது நாளாக தீவிர சிகிச்சைப் பிரிவில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் மருத்துவமனையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
அனைத்து வாயில்களிலும் தடுப்பு கட்டைகள், வேலிகள் அமைக்கப்பட்டு, வாகனங்கள் தீவிரமாக சோதனை செய்யப்படுகின்றன. இதற்கிடையே அதிபர் ஜேக்கப் ஜூமா நேற்று மருத்துவக் குழுவினரை சந்தித்து, மண்டேலாவின் உடல்நிலை குறித்தும் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை பற்றியும் கேட்டறிந்தார். மண்டேலாவுக்கு டாக்டர்கள் சிறந்த சிகிச்சை அளித்து வருவதாகவும், அவர்கள் மீது அதிபர் முழு நம்பிக்கை வைத்திருப்பதாகவும், அதிபர் மாளிகை செய்தி வெளியிட்டுள்ளது.
0 comments