5566 பணியிடங்களை நிரப்ப குரூப்-4 தேர்வு
நாளை முதல் விண்ணப்பிக்கலாம்
சென்னை, ஜூன் 13:
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம். அரசு அலுவலகங்களில் இளநிலை உதவியாளர் (பிணையற்றவை), தட்டச்சர், சுருக்கெழுத்தர் உள்ளிட்ட மொத்தம் 5566 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வு ஆகஸ்ட் 25-ம் தேதி நடைபெற உள்ளது.
தமிழகம் முழுவதிலும் உள்ள 258 மையங்களில் இந்த தேர்வு நடைபெறும். இத்தேர்வில் பங்கேற்க விருப்பம் உள்ள தகுதியான விண்ணப்பதாரர்கள், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் www.tnpsc.gov.in என்ற இணையதளம் மூலம் நாளை முதல் விண்ணப்பிக்கலாம்.
ஜூலை 15-ம் தேதி வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என டி.என்.பி.எஸ்.சி. தலைவர் நவநீதகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
0 comments