13 June 2013

5566 பணியிடங்களை நிரப்ப குரூப்-4 தேர்வு: நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

5566 பணியிடங்களை நிரப்ப குரூப்-4 தேர்வு

 நாளை முதல் விண்ணப்பிக்கலாம்



சென்னை, ஜூன் 13:

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம். அரசு அலுவலகங்களில் இளநிலை உதவியாளர் (பிணையற்றவை), தட்டச்சர், சுருக்கெழுத்தர் உள்ளிட்ட மொத்தம் 5566 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வு ஆகஸ்ட் 25-ம் தேதி நடைபெற உள்ளது.

தமிழகம் முழுவதிலும் உள்ள 258 மையங்களில் இந்த தேர்வு நடைபெறும். இத்தேர்வில் பங்கேற்க விருப்பம் உள்ள தகுதியான விண்ணப்பதாரர்கள், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் www.tnpsc.gov.in என்ற இணையதளம் மூலம் நாளை முதல் விண்ணப்பிக்கலாம்.

ஜூலை 15-ம் தேதி வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என டி.என்.பி.எஸ்.சி. தலைவர் நவநீதகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

0 comments

:) :-) :)) =)) :( :-( :(( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ :-$ (b) (f) x-) (k) (h) (c) cheer

 
© 2011 Ramanathapuram 2Day
Designed by FTech Cooperated with S.S.Karthik
Posts RSSComments RSS
Back to top