முறைகேடுகளை தவிர்க்க தட்கல் முன்பதிவில் புதிய முறை
சென்னை: ரயிலில் பயணம் செய்பவர்களே தட்கல் முன்பதிவு செய்ய வந்தால் அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் தனி வரிசை அமைப்பதற்கான சாத்தியங்கள் குறித்து ஆராய புதிய பரிசோதனை முயற்சியை ரயில்வே நாடு முழுவதும் தொடங்கியுள்ளது. ரயில்வே முன்பதிவில் போலி தரகர்களின், ரயில்வே ஊழியர்கள் சிலரின் முறைகேடுகளை தவிர்க்க ரயில்வே பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
முதலில் தட்கல் முன்பதிவு செய்யும் நேரத்தை வழக்கமான காலை 8 மணியில் இருந்து, காலை 10 மணிக்கு மாற்றப்பட்டது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் அறிமுகமான இந்த முறைக்கு கணிசமான வரவேற்பு உள்ளது. ஆனாலும், கோடை விடுமுறை நாட்கள், பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் முதல் நாள் இரவே தட்கல் முன்பதிவுக்காக காத்திருக்கும் நிலைமை இன்னும் மாறவில்லை.
இந்நிலையில் புதிய முயற்சியாக தட்கல் முன்பதிவு செய்ய பயணம் செய்பவரே முன்பதிவு செய்ய வந்தால் அவர்களுக்கு தனி வரிசை ஏற்படுத்தி தர ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. அதன் மூலம் மற்றவர்களுக்காக தட்கல் முன்பதிவு செய்ய வரும் போலி தரகர்களை அடையாளம் காண ரயில்வே திட்டமிட்டுள்ளது. இதற்கான சாத்தியங்கள் குறித்து ஆய்வு செய்ய பரிசோதனை முயற்சியை ரயில்வே நிர்வாகம் தொடங்கியுள்ளது.
அதன்படி ரயில்வே முன்பதிவு மையங்களில் தட்கல் முன்பதிவு செய்ய வருபவர்களில் எத்தனை பேர் தங்களுக்காக வருகிறார்கள், எத்தனைபேர் நண்பர்கள், உறவினர்களுக்காக வருகின்றனர் என்பதை சென்ட்ரலில் உள்ள முன்பதிவு மையம் உட்பட ரயில்வே முன்பதிவு மையங்களில் கணக்கு எடுக்கப்பட்டன. குடும்பத்தினருடன், நண்பர்களுடன் பயணம் செய்ய உள்ளவர்களில் யாராவது ஒருவர் முன்பதிவு செய்ய வந்தாலும் அவரும் தங்களுக்காக முன்பதிவு செய்ய வருபவராகவே கணக்கில் கொள்ளப்படுகிறது.
சென்னை சென்ட்ரல் உட்பட நாடு முழுவதும் உள்ள ரயில்வே முன்பதிவு மையங்களில் இந்த பணி கடந்த 3 நாட்களாக நடைபெற்று வருகின்றன. அதன்படி சென்ட்ரலில் மட்டும் ஒரு நாளைக்கு சாரசரியாக 350 முதல் 500 பேர் வரை தட்கல் முன்பதிவு செய்ய வருகின்றனர். அவர்களில் 70 சதவீதம் பேர் தங்களுக்காகவே முன்பதிவு செய்கின்றனர். வெறும் 30 சதவீதத்தினர் மட்டுமே உறவினர்கள், நண்பர்கள், அதிகாரிகளுக்கு முன்பதிவு செய்ய வருகின்றனர். இந்த பரிசோதனை முயற்சி அதிகாரிகள் சொல்லும் வரை தொடரும் என்று ரயில்வே ஊழியர்கள் தெரிவித்தனர்.
சென்ட்ரலில் ஆய்வு நடைபெறும் அதேநேரத்தில் எழும்பூர், மாம்பலம் உள்ளிட்ட முன்பதிவு மையங்களில் நேற்று தங்களுக்காக முன்பதிவு செய்ய வருபவர்களுக்கு தனி வரிசையும், மற்றவர்களுக்காக முன்பதிவு செய்ய வருபவர்களுக்கு தனி வரிசையும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
முதலில் தட்கல் முன்பதிவு செய்யும் நேரத்தை வழக்கமான காலை 8 மணியில் இருந்து, காலை 10 மணிக்கு மாற்றப்பட்டது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் அறிமுகமான இந்த முறைக்கு கணிசமான வரவேற்பு உள்ளது. ஆனாலும், கோடை விடுமுறை நாட்கள், பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் முதல் நாள் இரவே தட்கல் முன்பதிவுக்காக காத்திருக்கும் நிலைமை இன்னும் மாறவில்லை.
இந்நிலையில் புதிய முயற்சியாக தட்கல் முன்பதிவு செய்ய பயணம் செய்பவரே முன்பதிவு செய்ய வந்தால் அவர்களுக்கு தனி வரிசை ஏற்படுத்தி தர ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. அதன் மூலம் மற்றவர்களுக்காக தட்கல் முன்பதிவு செய்ய வரும் போலி தரகர்களை அடையாளம் காண ரயில்வே திட்டமிட்டுள்ளது. இதற்கான சாத்தியங்கள் குறித்து ஆய்வு செய்ய பரிசோதனை முயற்சியை ரயில்வே நிர்வாகம் தொடங்கியுள்ளது.
அதன்படி ரயில்வே முன்பதிவு மையங்களில் தட்கல் முன்பதிவு செய்ய வருபவர்களில் எத்தனை பேர் தங்களுக்காக வருகிறார்கள், எத்தனைபேர் நண்பர்கள், உறவினர்களுக்காக வருகின்றனர் என்பதை சென்ட்ரலில் உள்ள முன்பதிவு மையம் உட்பட ரயில்வே முன்பதிவு மையங்களில் கணக்கு எடுக்கப்பட்டன. குடும்பத்தினருடன், நண்பர்களுடன் பயணம் செய்ய உள்ளவர்களில் யாராவது ஒருவர் முன்பதிவு செய்ய வந்தாலும் அவரும் தங்களுக்காக முன்பதிவு செய்ய வருபவராகவே கணக்கில் கொள்ளப்படுகிறது.
சென்னை சென்ட்ரல் உட்பட நாடு முழுவதும் உள்ள ரயில்வே முன்பதிவு மையங்களில் இந்த பணி கடந்த 3 நாட்களாக நடைபெற்று வருகின்றன. அதன்படி சென்ட்ரலில் மட்டும் ஒரு நாளைக்கு சாரசரியாக 350 முதல் 500 பேர் வரை தட்கல் முன்பதிவு செய்ய வருகின்றனர். அவர்களில் 70 சதவீதம் பேர் தங்களுக்காகவே முன்பதிவு செய்கின்றனர். வெறும் 30 சதவீதத்தினர் மட்டுமே உறவினர்கள், நண்பர்கள், அதிகாரிகளுக்கு முன்பதிவு செய்ய வருகின்றனர். இந்த பரிசோதனை முயற்சி அதிகாரிகள் சொல்லும் வரை தொடரும் என்று ரயில்வே ஊழியர்கள் தெரிவித்தனர்.
சென்ட்ரலில் ஆய்வு நடைபெறும் அதேநேரத்தில் எழும்பூர், மாம்பலம் உள்ளிட்ட முன்பதிவு மையங்களில் நேற்று தங்களுக்காக முன்பதிவு செய்ய வருபவர்களுக்கு தனி வரிசையும், மற்றவர்களுக்காக முன்பதிவு செய்ய வருபவர்களுக்கு தனி வரிசையும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
0 comments