ராஜிவ் படுகொலை: விடை தெரியாக் கேள்விகள் - பகுதி 7
(எம்.கே.நாராயணனின் பங்கும் வீடியோ ரகசியமும்)
எம்.கே.நாராயணனின் பங்கும் வீடியோ ரகசியமும்
நாட்டின் முன்னாள் பிரதமர் கொல்லப்படுகின்றார். அது தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள் தாங்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே தண்டணை பெறுகின்றனர். ஆனால், இந்த கொலையில் வெளிவராத உண்மைகள் பலவற்றை தெரிந்தவர்கள் இன்னும் ஊமையாய் இருப்பதாக கூறுகின்றார் சி.பி.ஐ முன்னால் அதிகாரி ரகோத்தமன்.
மே21, 1991
கொலை நடைபெற்ற இடத்தில் சிறிதும் சேதமடையாமல் கிடந்த ஒரு கேமராவை போலீசார் கைப்பற்றுகின்றனர். அதிலிருந்த புகைப்படச்சுருள் மூலமாகவே, கொலையாளிகள் அடையாளம் காணப்படுகின்றனர்.
ஹரிபாபுவின் நிழற்படங்கள், வெளிச்சத்திற்கு வந்தபிறகே, இந்தகொலையின் இருள்சூழ்ந்த பக்கங்கள் ஒளிபெற்றன. ஒரே பரிமாணம் கொண்ட 9 புகைப்படங்கள், மர்மத்தின் முகமூடிகளை கிழித்தெறிந்தன.ஆனால், படுகொலை நடந்த மாலைப்பொழுதின், ஒவ்வொரு அசைவையும் பதிவு செய்த வீடியோவின் மூலமாக, சி.பி.ஐ எந்தவிதமான மர்மத்தையும் கண்டுபிடிக்கவில்லை என்பது ஆச்சரியம் தரும் உண்மை.
0 comments