ராஜிவ் படுகொலை: விடை தெரியாக் கேள்விகள் - பகுதி 5 (உளவுத்தகவல்களை உதாசினப்படுத்தியதன் விளைவு)
உளவுத்தகவல்களை உதாசினப்படுத்தியதன் விளைவு…
வெளிநாட்டுச்சதி, பல்வேறு தீவிரவாத இயக்கங்களின் கூட்ட முயற்சி,இவற்றையெல்லாம் தாண்டி, ராஜீவ்காந்தி படுகொலைக்கு முன்னும் பின்னும், அரசும், அரசு அதிகாரிகள் சிலரும் நடந்த கொண்ட விதங்கள், பல்வேறு சந்தேகங்களை எழுப்புவதாக, சி.பி.ஐ முன்னாள் அதிகாரி ரகோத்தமனும், பத்திரிக்கையாளர் ராஜீவ்சர்மாவும் கூறுகின்றனர்.
1987 ஆம் ஆண்டு ஜீன் 5 ஆம் தேதி. ரகசியம்
இந்திய உளவுத்துறை, மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு ஒரு அறிக்கையை அளிக்கின்றது. அதில் இஸ்ரேலிய உளவுத்துறையாலும், மேற்கத்திய நாடுகளை சேர்ந்த சில உளவு நிறுவனங்களினாலும் இந்தியாவின் முக்கிய நபர்களுக்கு ஆபத்து காத்திருப்பதாக தெரிவிக்கின்றது.
1989, டிசம்பர் 8, ரகசியம்
உளவுத்துறையின் இந்த ரகசிய அறிக்கை, ராஜீவ்காந்தியின் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதை தெளிவுபட தெரிவிக்கின்றது. இந்த அறிக்கை அளிக்கப்பட்டு இரண்டு மாதங்கள் கூட கழியாத நிலையில்.
1990, ஜனவரி, 23
மத்திய உளவுத்துறை இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் உள்ள தன்னுடைய, உயர் அதிகாரிகளுக்கு ஒரு சுற்றறிக்கைகையை அனுப்புகின்றது. அதில், ராஜீவின் உயிருக்கு குறிவைத்திருக்கும், இயக்கங்களின் பட்டியலை வெளியிடுகின்றது.
உளவுத்துறைக்கு கிடைத்த இந்த தகவல்கள், ராஜீவ்காந்தியின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து உறுதிபடுத்தி வந்துள்ளன.இந்த உளவுத்தகவல்களின் அடிப்படையில் அவருக்கு, நியாயமாக கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் உள்துறைஅமைச்சகம் எடுத்த முடிவும் அதுகுறித்து உடனடியாக கேள்வி எழுப்பாத உளவுத்துறையின் மௌனமும், நம்மை அதிர்ச்சியடையச் செய்கின்றன.
ஜீலை 19, 1990
அதுவரை ராஜீவ்காந்திக்கு வழங்கப்பட்டு வந்த எஸ்.பி.ஜி என்றழைக்கப்படும் உயர் பாதுகாப்பு, எந்தவித காரணமுமின்றி விலக்கிக்கொள்ளப்படுகின்றது. யாராலும் எளிதில் நெருங்க முடியாதபாதுகாப்பு வளையத்திற்குள் இருந்த ராஜீவ்காந்தி, தற்போது தாக்குவதற்கு எளிதான இலக்காக மாற்றப்படுகின்றார்.
0 comments