சுற்றுலா வந்தபோது காதல் மலர்ந்தது
ஓட்டல் ஊழியரை மணந்த ஜப்பான் பெண்
கன்னியாகுமரி :
கன்னியாகுமரி பகுதியை சேர்ந்தவர் ஆன்டனி பிரகாஷ் (30). பி.காம். பட்டதாரி. இவர் கடந்த 2009ம் ஆண்டு கன்னியாகுமரியில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் வரவேற்பாளராக பணியாற்றினார். அப்போது, ஜப்பான் நாட்டை சேர்ந்த ஒரு குழுவினர் ஆன்டனி பிரகாஷ் பணியாற்றிய ஓட்டலுக்கு வந்தனர்.
அந்த குழுவில் இருந்த டோக்கியோவை சேர்ந்த ஷானா அபே (28) என்ற இளம்பெண் திரும்பி போகும்போது ஆன்டனியின் தொலைபேசி எண்ணை வாங்கி சென்றார். இருவரும் தொலைபேசி மூலமாகவும், இன்டர்நெட் மூலமாகவும் நட்பை வளர்த்துள்ளனர். இது நாளடைவில் காதலாக மாறியது. புத்த மதத்தை சேர்ந்தவரான ஷானா ஆபே, கத்தோலிக்க மதத்துக்கு மாறி மேரி இமாக்குலேட் என பெயரை மாற்றிக் கொண்டார். இருவருக்கும் நேற்று கன்னியாகுமரி அலங்கார மாதா ஆலயத்தில் கத்தோலிக்க கிறிஸ்தவ முறைப்படி திருமணம் நடந்தது.
எக்ஸ்ட்ரா தகவல்
126.66 மில்லியன் மக்கள்தொகை கொண்ட ஜப்பானில் சின்த்தோவும், புத்த மதமும் முக்கிய மதங்களாக இருக்கின்றன. கிறிஸ்தவ மதம் சிறுபான்மை மக்களால் பின்பற்றப்படுகிறது.
அந்த குழுவில் இருந்த டோக்கியோவை சேர்ந்த ஷானா அபே (28) என்ற இளம்பெண் திரும்பி போகும்போது ஆன்டனியின் தொலைபேசி எண்ணை வாங்கி சென்றார். இருவரும் தொலைபேசி மூலமாகவும், இன்டர்நெட் மூலமாகவும் நட்பை வளர்த்துள்ளனர். இது நாளடைவில் காதலாக மாறியது. புத்த மதத்தை சேர்ந்தவரான ஷானா ஆபே, கத்தோலிக்க மதத்துக்கு மாறி மேரி இமாக்குலேட் என பெயரை மாற்றிக் கொண்டார். இருவருக்கும் நேற்று கன்னியாகுமரி அலங்கார மாதா ஆலயத்தில் கத்தோலிக்க கிறிஸ்தவ முறைப்படி திருமணம் நடந்தது.
எக்ஸ்ட்ரா தகவல்
126.66 மில்லியன் மக்கள்தொகை கொண்ட ஜப்பானில் சின்த்தோவும், புத்த மதமும் முக்கிய மதங்களாக இருக்கின்றன. கிறிஸ்தவ மதம் சிறுபான்மை மக்களால் பின்பற்றப்படுகிறது.
0 comments