30 October 2013

மயிலாடுதுறை அருகே கர்ப்பிணி மனைவியுடன் கணவன் வெட்டிகொலை

மயிலாடுதுறை அருகே கர்ப்பிணி மனைவியுடன் 
கணவன் வெட்டிகொலை


மயிலாடுதுறை: 

                     நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள குத்தாலத்தை அடுத்த ராஜகோபாலபுரத்தை சேர்ந்தவர் சிவக்குமார் (34). இவரது மனைவி ரேகா (28). இவர்களுக்கு அன்பு நம்பி (2) என்ற மகன் உள்ளார். கத்தாரில் மீன் வியாபாரம் செய்து வந்த சிவக்குமார் கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் ஊருக்கு வந்தார். அவரது மனைவி ரேகா 4 மாதம் கர்ப்பமாக இருந்தார். 

இந்நிலையில், நேற்று அதிகாலை சிவக்குமாரின் வீட்டில் இருந்து பயங்கர அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் எழுந்து அங்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது வீட்டுக்கு வெளியில் வாசலில், வெட்டுக்காயங்களுடன் சிவக்குமார் இறந்து கிடந்தார். 

உள்ளே சென்று பார்த்தபோது, அவரது மனைவி ரேகாவும் கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் உட்கார்ந்த நிலையில் இருந்தார். அவரது தலை, கழுத்து உள்ளிட்ட இடங்களில் வெட்டுக்காயங்கள் இருந்தன.

வீட்டு ஜன்னலை பிடித்தபடி அவர்களது 2 வயது மகன் அன்பு நம்பி, ‘மாமா, மாமா‘ என கதறியபடி நின்று கொண்டிருந்தான்.உடனடியாக குத்தாலம் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று தகவல் தெரிவித்தனர். 

போலீசார் அங்கு சென்று, கொல்லப்பட்ட 2 பேரின் உடல்களையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதுதொடர்பாக சிவக்குமாரிடம் ரூ.80 லட்சம்கடன் வாங்கிய உறவினர் உள்பட 3 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.  இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள் ளது.

Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

0 comments

:) :-) :)) =)) :( :-( :(( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ :-$ (b) (f) x-) (k) (h) (c) cheer

 
© 2011 Ramanathapuram 2Day
Designed by FTech Cooperated with S.S.Karthik
Posts RSSComments RSS
Back to top