நொய்டாவில் தனியாக இருந்த பெண்ணை அடித்து உதைத்து பலாத்காரம் செய்த போலீஸ்காரர்கள்
புதுடெல்லி, ஆக. 31:-
உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த பெண்ணை நேற்று இரவு ஒரு கும்பல் அடித்து உதைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளது. பின்னர் அவரிடம் இருந்த பணம் மற்றும் அவரது ஏ.டி.எம். கார்டை திருடிச் சென்றுவிட்டது.
இது தொடர்பாக அந்தப் பெண் இன்று காலை போலீசில் புகார் அளித்தார். அவர் தனது மனுவில், "தான் குடியிருந்த அதே குடியிருப்பில் வசித்து வந்த ஒரு நபர் போலீஸ் வேலையில் சேருவதற்கு தயாராகி வந்தார். அவர் தனது நண்பர்களுடன் வீட்டிற்குள் வந்து பலாத்காரம் செய்தனர்" என்று குறிப்பிட்டிருந்தார்.
அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, குற்றம் சாட்டப்பட்ட நபர் மற்றும் அவரது நண்பர்களான இரண்டு போலீஸ்காரர்கள் உள்ளிட்ட 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அந்த பெண்ணை பலாத்காரம் செய்தபிறகு, அவரது ஏ.டி.எம். கார்டை திருடியுள்ளார். அதன்மூலம் பணத்தை எடுத்துச் சென்ற காட்சி கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருப்பதாக போலீஸ் அதிகாரி அருண் குமார் தெரிவித்தார்.
0 comments