டைரக்டர் சேரன் மகளை காதலித்ததால்
என் தம்பியை ஓடஓட விரட்டி தாக்கினர்
அக்காள் பத்மா பேட்டி
டைரக்டர் சேரன் மகள் தாமினி காதலிக்கும் சந்துருவின் அக்காள் பத்மா போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:–
என் தம்பி சந்துரு டைரக்டர் சேரன் மகளை காதலிக்கும் விஷயம் எங்கள் குடும்பத்தினருக்கு தெரிந்ததும் வருத்தப்பட்டோம். நல்ல படங்கள் எடுத்த பெரிய டைரக்டர் அவர் மனது கஷ்டப்படும். காதல் வேண்டாம் என்று என் தம்பியை கண்டித்தோம். ஆனால் திடீரென்று சேரனே எங்கள் வீட்டுக்கு வந்தார். மகள் காதலை ஏற்றுக் கொள்வதாக சொன்னார். படிப்பு முடிந்ததும் இருவருக்கும் திருமணம் செய்து வைக்கலாம் என்று கூறினார்.
நாங்கள் சந் தோஷப்பட்டோம். ஆனால் கடந்த 20 நாட்களுக்கு முன்பு சேரன் ஆட்கள் திடீரென எங்கள் வீட்டுக்கு வந்து அவர் மகளை மறந்து விடும்படி சொல்லி மிரட்டினார்கள். பிறகு சேரனும் வந்து மிரட்டல் விடுத்தார். ஒரு வாரத்துக்கு முன்பு கோடம்பாக்கத்தில் சேரனும் அவர் ஆட்களும் என் தம்பியை ஓட ஓட விரட்டி அடித்துள்ளனர்.
சேத்துப்பட்டு போலீசில் பொய் புகார் அளித்து என் தம்பியிடம் காதலியை பின் தொடர மாட்டேன் என்று எழுதி வாங்கியுள்ளனர். தம்பி உயிருக்கு ஆபத்து இருப்பதால் வெளியூருக்கு அனுப்பி பாதுகாப்பான இடத்தில் வைத்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
0 comments