18 July 2013

சிலைமான் அருகே இராமேசுவரம் பயணிகள் ரெயில் மீது சரமாரி கற்கள் வீச்சு: பயணி படுகாயம்

சிலைமான் அருகே இராமேசுவரம் பயணிகள் ரெயில் மீது சரமாரி கற்கள் வீச்சு: பயணி படுகாயம்



இராமநாதபுரம், ஜூலை. 18:

                    மதுரையில் இருந்து இராமேசுவரத்திற்கு நேற்று மாலை 6.05 மணிக்கு பயணிகள் ரெயில் புறப்பட்டு சென்றது. ரெயிலில் ஏராளமான பயணிகள் இருந்தனர். சிலைமான் நோக்கி சென்றபோது புதரில் மறைந்து இருந்த ‘மர்ம’ ஆசாமிகள் சிலர் சரமாரியாக ரெயில்மீது கற்களை எடுத்து வீசினர். இதனால் பயணிகள் ஜன்னல் கதவுகளை மூடினர். ‘மர்ம’ ஆசாமிகள் கற்கள் வீசியதில் கடம்பூரை சேர்ந்த சுப்பிரமணியன் (வயது 45) என்பவர் படுகாயம் அடைந்தார்.

திருப்புவனம் ரெயில் நிலையம் சென்றதும் அங்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ரெயில் மீது கற்கள் வீசிய ‘மர்ம’ ஆசாமிகளை ரெயில்வே போலீசார் தேடி வருகிறார்கள்.

கடந்த சில நாட்களாக இராமேசுவரம் பயணிகள் ரெயில் மீது கற்கள் வீசப்பட்டு வருவதால் பயணிகள் அச்சம் அடைந்துள்ளனர்.
Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

0 comments

:) :-) :)) =)) :( :-( :(( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ :-$ (b) (f) x-) (k) (h) (c) cheer

 
© 2011 Ramanathapuram 2Day
Designed by FTech Cooperated with S.S.Karthik
Posts RSSComments RSS
Back to top