துள்ளி விளையாடு - திரை விமர்சனம்
ஹீரோ யுவராஜுக்கு தொழில் அதிபராக வேண்டும், அவர் நண்பர்களான சூரிக்கு அரசியல்வாதியாக வேண்டும், சென்ட்ராயனுக்கு சூப்பர் ஸ்டாராக வேண்டும் என்பது கனவு. வேலைவெட்டி இல்லாமல் திரியும் இவர்களால் அதை எப்படி அடைய முடியும்? அதற்கும் நேரம் வருகிறது.
அரசியல்வாதி ஜெயப்பிரகாஷ் தேர்தலில் ஜெயிப்பதற்காக, தாதா பிரகாஷ்ராஜிடம் இருந்து 20 கோடி பணம் வாங்குகிறார். திடீரென அவர் வீட்டுக்கு வருமானவரி அதிகாரிகள் வர, பணத்தை காருக்குள் மறைத்து புதிதாக வேலைக்கு சேர்ந்த யுவராஜிடம் அந்த காரை கொடுத்து அனுப்புகிறார்.
இது தெரியாமல் பிரகாஷ்ராஜ் தன் ஆட்களை விட்டு பணத்துடன் திரியும் யுவராஜை மடக்கி, அந்த காரில் இருந்து இரண்டு கோடி ரூபாயை எடுத்துக் கொண்டு போக, காரின் சீட்டில் மறைக்கப்பட்டிருந்த 18 கோடி ரூபாய் யுவராஜ் கையில். இதன் மூலம் தங்கள் லட்சியத்தை நிறைவேற்ற நண்பர்கள் திட்டமிடுகிறார்கள். காருடன் ராஜஸ்தான் எஸ்கேப் ஆகிறார்கள். அவர்களை துரத்திக் கொண்டு பிரகாஷ் ராஜும், ஜெயப்பிரகாசும் வர, அடுத்து என்ன நடக்கிறது என்பது மீதிக் கதை.
சித்தி கொடுமை, தந்தையின் அன்பு, தங்கையின் திருமணம் என்ற சென்டிமென்ட் ஏரியாவுக்குள் கலங்க வைக்கும் யுவராஜ், 18 கோடி கையில் கிடைத்ததும் ஜாலி டூர் அடிக்க கிளம்பி விடுகிறார். அவரை காதலிப்பதற்கென்றே ராஜஸ்தான் வந்து சேர்கிறார் ஹீரோயின் தீப்தி. நிறைய கெட்ட வார்த்தைகள் பேசுகிறார். யுவராஜை காதலிக்கிறார். டூயட் பாடுகிறார். அட்வைஸ் பண்ணுகிறார்.
காமெடி வில்லனாக பிரகாஷ்ராஜ். கடவுளே கடவுளே என்று ஜெயப்பிரகாசிடம் பணிந்து போவது, தன் அடிபொடிகளிடம் தன் காதல் கதையை ரசித்துச் சொல்வது, எத்தனை டென்ஷன் இருந்தாலும் இந்தி பாடல்களை கேட்பது என்று தன் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார். ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் பாடல்கள் பரவாயில்லை.
இது தெரியாமல் பிரகாஷ்ராஜ் தன் ஆட்களை விட்டு பணத்துடன் திரியும் யுவராஜை மடக்கி, அந்த காரில் இருந்து இரண்டு கோடி ரூபாயை எடுத்துக் கொண்டு போக, காரின் சீட்டில் மறைக்கப்பட்டிருந்த 18 கோடி ரூபாய் யுவராஜ் கையில். இதன் மூலம் தங்கள் லட்சியத்தை நிறைவேற்ற நண்பர்கள் திட்டமிடுகிறார்கள். காருடன் ராஜஸ்தான் எஸ்கேப் ஆகிறார்கள். அவர்களை துரத்திக் கொண்டு பிரகாஷ் ராஜும், ஜெயப்பிரகாசும் வர, அடுத்து என்ன நடக்கிறது என்பது மீதிக் கதை.
சித்தி கொடுமை, தந்தையின் அன்பு, தங்கையின் திருமணம் என்ற சென்டிமென்ட் ஏரியாவுக்குள் கலங்க வைக்கும் யுவராஜ், 18 கோடி கையில் கிடைத்ததும் ஜாலி டூர் அடிக்க கிளம்பி விடுகிறார். அவரை காதலிப்பதற்கென்றே ராஜஸ்தான் வந்து சேர்கிறார் ஹீரோயின் தீப்தி. நிறைய கெட்ட வார்த்தைகள் பேசுகிறார். யுவராஜை காதலிக்கிறார். டூயட் பாடுகிறார். அட்வைஸ் பண்ணுகிறார்.
காமெடி வில்லனாக பிரகாஷ்ராஜ். கடவுளே கடவுளே என்று ஜெயப்பிரகாசிடம் பணிந்து போவது, தன் அடிபொடிகளிடம் தன் காதல் கதையை ரசித்துச் சொல்வது, எத்தனை டென்ஷன் இருந்தாலும் இந்தி பாடல்களை கேட்பது என்று தன் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார். ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் பாடல்கள் பரவாயில்லை.
ஹீரோயின் தீப்தி நடிகை அசினின் தங்கை, இந்தி இசை ரசிக வில்லன், ‘தோத்தா செத்துருவேன்’ என்கிற அரசியல்வாதி என வித்தியாசமான கேரக்டர்களால் படத்தை சுவாரஸ்யப்படுத்த முயற்சித்திருக்கிறார் இயக்குனர். முன்பகுதியில் காமெடி தடத்தில் செல்லும் படம், ராஜஸ்தான் சென்றதும் திக்குதெரியாத காட்டில் விட்ட மாதிரி தவிக்கிறது. யுவராஜ், தீப்தி காதலில் அப்படியொரு செயற்கைத் தனம். 18 கோடியை வைத்து தங்கள் லட்சியத்தை நிறைவேற்றாமல் ராஜஸ்தான் பாலைவனத்தையே சுற்றி வருவதுதான் மெகா சைஸ் காமெடி.
0 comments