7 July 2013

பீகார் மாநிலம் புத்தகயாவில் அடுத்தடுத்து 9 இடங்களில் தொடர் வெடிகுண்டு வெடிப்பு

பீகார் மாநிலம் புத்தகயாவில் அடுத்தடுத்து 9 இடங்களில் தொடர் வெடிகுண்டு வெடிப்பு


 புத்தகயா, ஜூலை 7:
 
                      பீகார் மாநிலம் புத்தகயா மாவட்டத்தில் உள்ள மகாபோதி கோயில் அருகே 9 வெவ்வேறு இடங்களில் குண்டு வெடித்தன. இந்த சம்பவத்தில் 5 பேர் காயமடைந்ததனர். வீரியம் குறைந்த குண்டு என்பதால் கோயிலுக்கு எதுவும் சேதம் இல்லை என முதற்கட்ட தகவல் தெரியவந்துள்ளது. சம்பவ இ‌டத்திற்கு தீயணைப்பு வீரர்கள் மற்றும் சி.ஆர்.பி.எப்., வீரர்கள் விரைந்துள்ளனர்.

முதல் குண்டுவெடிப்பு:

பீகார் மாநிலம் புத்தகயாவில் உள்ள மகாபோதி கோயில் அருகே முதல் குண்டுவெடிப்பு அதிகாலை 5:15 மணிக்கு நடந்தது. 

அதன் பின்னர் அடுத்தடுத்து 9 இடங்களில் குண்டுவெடிப்பு நடநத்து. ஒரு வெடிகுண்டு கோயிலில் வெடித்தது. 

கோயிலின் அருகே வெடிக்காத குண்டு கண்டு பிடிக்கப்பட்டது. 

இவ்வாறு குண்டு வெடிப்பு நிகழக்கூடும் என்‌று புலனாய்வுத்துறை ஒரு மாதம் முன்பே எச்சரித்திருந்தும் அதை சம்பந்தப்பட்டவர்கள் அலட்சியப்படுத்தி விட்டதாக கூறப்படுகிறது.
Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

0 comments

:) :-) :)) =)) :( :-( :(( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ :-$ (b) (f) x-) (k) (h) (c) cheer

 
© 2011 Ramanathapuram 2Day
Designed by FTech Cooperated with S.S.Karthik
Posts RSSComments RSS
Back to top