இராமநாதபுரத்தில் தீ விபத்தில் வீடு எரிந்து சாம்பல்
இராமநாதபுரம், ஜூன். 6:
இராமநாதபுரம் நொச்சி வயல் ஊரணியை சேர்ந்தவர் தங்கம். இவரது மகள் உஷா (வயது 22). இவர் அந்த பகுதியில் குடிசை வீட்டில் தங்கி தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.
நேற்று காலையில் அவர் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்று இருந்தார். மாலையில் அவரது வீடு திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. இதுபற்றி தகவல் அறிந்ததும் இராமநாதபுரம் தீயணைப்பு நிலையத்தில் இருந்து நிலைய அதிகாரி சாம்ராஜ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்த டி.வி., மின்விசிறி, ரேசன் கார்டு, உஷாவின் பிளஸ்-2 மதிப்பெண் சான்று, மார்க் சீட் மற்றும் பொருட்கள் எரிந்து நாசமானது. விசாரணையில் மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது.
0 comments