சாம்பியன் டிராபி கிரிக்கெட் அரை இறுதியில் இலங்கை
லண்டன்:
ஆஸ்திரேலியாவுனான லீக் ஆட்டத்தில் இலங்கை 20 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்து அரை இறுதியில் நுழைந்தது.
இங்கிலாந்தில் நடந்து வரும் கடைசி மினி உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடரில், பி பிரிவில் இருந்து இந்தியா, தென் ஆப்ரிக்க அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்றுவிட்டன.
ஏ பிரிவில் இருந்து இங்கிலாந்து அணியும் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறுவதை உறுதி செய்துவிட்டது.எனினும், அந்த பிரிவில் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் எவை என்பதை தீர்மானிக்க ஆஸி. & இலங்கை அணிகள் மோதும் கடைசி லீக் ஆட்டத்தின் முடிவு வரை காத்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இந்த பரபரப்பான நிலையில், லண்டன் கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில் (பகல்/ இரவு), டாசில் வென்ற ஆஸி. அணி முதலில் பந்துவீசியது.அபாரமாக விளையாடிய ஜெயவர்தனே அரை சதம் அடித்து அசத்தினார். சண்டிமால் 31 ரன் எடுத்து ஜான்சன் வேகத்தில் ஹியூஸ் வசம் பிடிபட்டார். அதிரடி வீரர் குலசேகரா 6, ஹெராத் 2 ரன் எடுத்து ரன் அவுட் ஆகினர்.
இலங்கை அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 253 ரன் குவித்தது. ஜெயவர்தனே 84 ரன் (81 பந்து, 11 பவுண்டரி), மலிங்கா 2 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
29.1 ஓவரில் 254 ரன் எடுத்தால் மட்டுமே அரை இறுதியில் நுழைய முடியும் என்ற இக்காட்டான சூழ்நிலையில் களம் இறங்கிய ஆஸ்திரேலிய வீரர்களால் இலங்கை வீரர்களின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறினார்கள்.
இந்த போட்டியில் மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட வாட்சன் 32 ரன்னில் அவுட் ஆக அடுத்து வந்த வீரர்கள் வந்த வேகத்தில் அவுட் ஆனார்கள். இதனால் அந்த அணி 42.3 ஓவரில் 233 ரன்மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.
கடைசி லீக் ஆட்டத்தில் வெற்றி பெற்றதன் மூலம் அரை இறுதியில் இலங்கை அணி நுழைந்தது. இந்த தோல்வியினால் போட்டியிலிருந்து நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா பரிதாபமாக வெளியேறியது.
0 comments