15 June 2013

"ஒண்ணே ஒன்னும் தன் கண்ணுக்கே" தி.மு.க, சார்பில் கலைஞர் கருணாநிதியின் மகள் கனிமொழி மட்டும் போட்டி

"ஒண்ணே ஒன்னும் தன் கண்ணுக்கே"

தி.மு.க, சார்பில் கலைஞர் கருணாநிதியின் மகள் 

கனிமொழி மட்டும் போட்டி



சென்னை : 

ராஜ்யசபா தேர்தலில் மொத்தம் 6 உறுப்பினர் பதவிக்கு தேர்தல் நடக்கவிருக்கிறது. இதில் ஒரே ஒரு எம்.பி., மட்டுமாவது வெற்றி பெற முடியுமா என்ற சந்தேகத்தில் இருக்கும் போது தி.மு.க, தரப்பில் மீண்டும் கருணாநிதியின் மகள் கனிமொழிக்கே இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில் அரசியல் ரீதியாகவோ சட்ட நடைமுறைப்படியோ பல யூகங்களின் அடிப்படையில் கனிமொழியை வெற்றி பெற செய்ய முடியும். இதற்கான உள்ளடி வேலைகளில் தி,மு.க., அரசியல் காய்களை நகர்த்த துவங்கி விட்டது.

அ.தி.மு.,க வுக்கு 5 பேர் :

தமிழகத்தில் காலாவதியான ராஜ்யசபாவுக்கான உறுப்பினர் தேர்தல் வரும் 27ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனு வரும் 10 ம் தேதி துவங்கியது. அதி.மு.க,தரப்பில் ஜெ., முன்னிலையில் 5 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர். எம்.எல்.ஏ.,க்கள் ஓட்டுக்களின் எண்ணிக்கையின்படியே இந்த எம்.பி.,க்களை தேர்வு செய்ய முடியும். இதன் படி அதிக பட்சமாக ஒரு எம்.பி.,க்கு 33 ஓட்டுக்கள் கிடைத்தால் அவர்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். இந்த கணக்கின்படி பார்த்தால் அ.தி.மு.,க வுக்கு அறிவிக்கப்பட்ட 5 பேரும் எம்.பி.,க்களாக தேர்வு செய்யப்படுவது உறுதியாகி விட்டது.


ஆனால் தி.மு.க,வுக்கு தற்போது 23 எம்,எல்.ஏ.,க்கள் உள்ளனர். 6 வது இடத்திற்கு வேறு எந்த கட்சிகளும் போட்டியிடுமா என்ற கேள்விக்கு இது வரை தே.மு.தி.க., உள்பட எந்த கட்சியும் வாய்திறக்கவில்லை. தே.மு.தி.க.,வில் உள்ள மொத்தம் 29 எம்.எல்.ஏ.,க்களில் 6 பேர் தற்போது அதிருப்தி எம்.எல்.ஏ.,க்களாக செயல்பட்டு வருகின்றனர். எனவே இந்த கட்சி சார்பில் ஒரு எம்.பி.,க்கு போட்டியிட்டாலும் இடதுசாரிகள் ஆதரவை பெற வேண்டும்.

இடது சாரி என்ன செய்யும் ?
இடது சாரிகட்சியை பொறுத்தவரை மொத்தம் 18 பேர் உள்ளனர். இவர்களின் ஆதரவு யாருக்கு கிடைக்கும் என்ற கேள்வியும் எழுகிறது. அ.தி.மு.,க கூட்டணியில் இருக்கும் இந்த கட்சிக்கு ஒரு சீட் கூட ஒதுக்காமல் அ.தி.மு.க, 5 பேரை அறிவித்திருப்பதால் இந்த இடது சாரியினர் அதிருப்பதியில் உள்ளனர். இதனால் இந்த நேரத்தில் இந்த எம்.எல்.ஏ.,க்களோ, காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களோ சிலர் ஆதரித்தாலே கனிமொழி வெற்றி கிடைத்து விடும். தி.மு.க.,வுக்கு தெரியாத அரசியல் கணக்கா எப்படியாவது கனிமொழியை வெற்றி பெற செய்ய திரைமறைவு வேலைகள் நடக்கும். ஒரு வேளை தே.மு..தி.,கவின் ஆத‌ரவை கூட தி.மு.க., பெறும் என்றும் கூறப்படுகிறது.

கருணாநிதியிடம் கனிவான ஆசி : இதற்கிடையில் இன்று தி.மு.க., சார்பில் கனிமொழி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து கனிமொழி கருணாநிதியிடம் ஆசி பெற்றார். இன்று தலைமை செயலகம் சென்று தேர்தல் அதிகாரி ஜமாலுதீனிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். வரும் 27 ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ஓட்டுப்பதிவு நடக்கும். மாலையில் முடிவுகள் அறிவிக்கப்படும்.
Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

0 comments

:) :-) :)) =)) :( :-( :(( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ :-$ (b) (f) x-) (k) (h) (c) cheer

 
© 2011 Ramanathapuram 2Day
Designed by FTech Cooperated with S.S.Karthik
Posts RSSComments RSS
Back to top