சென்னை:
ராஜ்யசபா தேர்தலில் திமுக வேட்பாளர் கனிமொழியை 2 எம்.எல்.ஏக்களைக் கொண்டிருக்கும் மனித நேய மக்கள் கட்சி ஆதரிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த 6 ராஜ்யசபா எம்.பி.க்களின் பதவிக் காலம் முடிவடைவதால் வரும் 27-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் அதிமுக அணியில் 5 பேரின் வெற்றி உறுதியாகிவிட்டது.
ராஜ்யசபா தேர்தலில் திமுக வேட்பாளர் கனிமொழியை 2 எம்.எல்.ஏக்களைக் கொண்டிருக்கும் மனித நேய மக்கள் கட்சி ஆதரிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த 6 ராஜ்யசபா எம்.பி.க்களின் பதவிக் காலம் முடிவடைவதால் வரும் 27-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் அதிமுக அணியில் 5 பேரின் வெற்றி உறுதியாகிவிட்டது.
6வது எம்.பி. இடத்துக்கு திமுகவும் தேமுதிகவும் மோதுகின்றன. காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் எப்படியும் வென்றுவிடலாம் என்று நம்பியது திமுக. ஆனால் தேமுதிகவை ஆதரிப்பதிலேயே காங்கிரஸ் முனைப்பு காட்டி வருகிறது.
இதனால் 3 எம்.எல்.ஏக்களைக் கொண்டிருக்கும் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் தலா 2 எம்.எல்.ஏக்களைக் கொண்டிருக்கும் மனித நேய மக்கள் கட்சி, புதிய தமிழகம் கட்சிகள் பக்கம் திமுக கவனத்தைத் திருப்பியது.
பாமக இளைஞரணித் தலைவருடன் திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் நேற்று சந்தித்துப் பேசியிருந்தார்.
பாமக இளைஞரணித் தலைவருடன் திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் நேற்று சந்தித்துப் பேசியிருந்தார்.
இந்த நிலையில் மனித நேய மக்கள் கட்சியின் எம்.எல்.ஏக்களான ஜவாஹிருல்லா மற்றும் ஆம்பூர் அஸ்லாம் ஆகியோர் இன்று திடீரென திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்துப் பேசினர்.
இந்த சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் எம்.எல்.ஏவுமான ஜவாஹிருல்லா, ராஜ்யசபா தேர்தலில் தாமும் மற்றொரு எம்.எல்.ஏவும் திமுக வேட்பாளரை ஆதரிப்போம் என்றார்.
மனித நேய மக்கள் கட்சியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பால் காங்கிரஸ் உருவாக்கிய நெருக்கடியில் இருந்து சற்றே மீண்டிருக்கிறது திமுக.
மேலும் கடந்த சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது மனிதநேய மக்கள் கட்சி. தற்போது திமுக அணியில் இணைந்திருப்பதன் மூலம் எதிர்வரும் லோக்சபா தேர்தலில் திமுக அணியிலேயேதான் அக்கட்சி நீடிக்கும் எனத் தெரிகிறது.
இந்த சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் எம்.எல்.ஏவுமான ஜவாஹிருல்லா, ராஜ்யசபா தேர்தலில் தாமும் மற்றொரு எம்.எல்.ஏவும் திமுக வேட்பாளரை ஆதரிப்போம் என்றார்.
மனித நேய மக்கள் கட்சியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பால் காங்கிரஸ் உருவாக்கிய நெருக்கடியில் இருந்து சற்றே மீண்டிருக்கிறது திமுக.
மேலும் கடந்த சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது மனிதநேய மக்கள் கட்சி. தற்போது திமுக அணியில் இணைந்திருப்பதன் மூலம் எதிர்வரும் லோக்சபா தேர்தலில் திமுக அணியிலேயேதான் அக்கட்சி நீடிக்கும் எனத் தெரிகிறது.
0 comments