27 May 2013

திடீர் திருப்பம்:கிரிக்கெட் சூதாட்டம் முக்கிய குற்றவாளி சஞ்சய் பாப்னா கைது

திடீர் திருப்பம்:
சென்னை கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பான வழக்கில் 
முக்கிய குற்றவாளி சஞ்சய் பாப்னா கைது




சென்னை: சென்னையில் நடைபெற்ற கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பான வழக்கில், திடீர் திருப்பமாக முக்கிய குற்றவாளி சஞ்சய் பாப்னா கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையில் கிரிக்கெட் சூதாட்டம் நடப்பதாக சிபிசிஐடி போலீசுக்கு தகவல் வந்தது. ஐஜி மஞ்சுநாதா உத்தரவின்படி எஸ்பிக்கள் ராஜேஸ்வரி, பெருமாள் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக கருதப்பட்ட பிரசாந்த், கிட்டி (எ) உத்தம்சிங் ஜெயின், வேதாச்சலம் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர். அதில் பிரசாந்தை போலீசார் 3 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களிடம் இருந்து இதுவரை ரூ.20 லட்சம், கம்ப்யூட்டர்கள், செல்போன்கள், சிம்கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த வழக்கில் மற்றொரு முக்கிய குற்றவாளியான சஞ்சய் பாப்னாவை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். அவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். ஆனால், முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அவரை சிபிசிஐடி போலீசார் தொடர்ந்து தேடி வந்தனர். 
இந்நிலையில் தென் ஆப்ரிக்காவில் இருந்து சென்னை விமான நிலையம் வந்தபோது இன்று காலை சஞ்சய் பாப்னாவை போலீசார் கைது செய்தனர். அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்தான், பிரசாந்த், கிட்டி ஆகியோருக்கும், மும்பை, டெல்லியில் உள்ள முக்கிய தரகர்களுக்கும் இடையே இடை தரகராக செயல்பட்டவர். இதனால் இவரிடம் விசாரணை நடத்தினால், மும்பை, டெல்லி தொடர்புகள் தெரிய வரும் என்று போலீசார் எதிர்பார்க்கின்றனர். இதனால் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

0 comments

:) :-) :)) =)) :( :-( :(( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ :-$ (b) (f) x-) (k) (h) (c) cheer

 
© 2011 Ramanathapuram 2Day
Designed by FTech Cooperated with S.S.Karthik
Posts RSSComments RSS
Back to top