18 May 2013

கம்பங்கூழ்

 கோடை உணவு: கம்பங்கூழ்


என்னென்ன தேவை?

உடைத்த கம்பு குருணை - 1 கப்,

தண்ணீர் - 3 கப்,

கடைந்த தயிர் - 1 கப்,

மோர் - 2 கப்,

பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1 டீஸ்பூன்,

பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2,

உப்பு - தேவையான அளவு.


எப்படிச் செய்வது?


கம்பு குருணையை கழுவி, 10 நிமிடங்கள் ஊறவைத்து, 3 கப் தண்ணீர் விட்டு குக்கரில் 6 விசில் வேகவிடவும் வெந்து ஆறியதும் மோர், தயிர், உப்பு,  வெங்காயம், பச்சைமிளகாய் போட்டு நீர்க்கக் கரைத்து பரிமாறவும். 4 கம்பு வெந்ததும் அதை உருண்டைகளாக உருட்டி வைத்து, தேவைப்படும் போது  ஒரு உருண்டை எடுத்து கரைக்கலாம். சூடாக இருக்கும் போது சாதமாகவும் சாப்பிடலாம். மீதமான கம்புருண்டைகளை தண்ணீரில் போட்டு வைக்க  வேண்டும். மண் சட்டியில் செய்தால் சுவைகூடும். 4 கம்பங்கூழை தினம் தண்ணீர் மாற்றி 3 நாட்கள் வரை பயன்படுத்தலாம்.


Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

0 comments

:) :-) :)) =)) :( :-( :(( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ :-$ (b) (f) x-) (k) (h) (c) cheer

 
© 2011 Ramanathapuram 2Day
Designed by FTech Cooperated with S.S.Karthik
Posts RSSComments RSS
Back to top