சென்னையில் முதன்முறையாக நடக்கிறது உலக செஸ் சாம்பியன் போட்டி இன்று ஆரம்பம்
சென்னை :
உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியை, சென்னையில் முதல்வர் ஜெயலலிதா இன்று தொடங்கி வைக்கிறார். தமிழக வீரர் ஆனந்த், நார்வேயைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் மேக்னஸ் கார்ல்சென் ஆகியோர் இதில் மோத உள்ளனர். தமிழக அரசும், தமிழ்நாடு மாநில சதுரங்க கழகமும் இணைந்து சென்னையில் முதல் முறையாக உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியை நடத்துகிறது. இப்போட்டியை நடத்துவதற்காக, தமிழக அரசு சார்பில் முதல்வர் ஜெயலலிதா 29 கோடி ஒதுக்கீடு செய்திருந்தார்.
இன்று தொடங்கும் இப்போட்டியில், உலக செஸ் போட்டியில், 5 முறை உலக சாம்பியன் பட்டத்தை வென்றவரும், இந்திய கிராண்ட் மாஸ்டருமான விஸ்வநாதன் ஆனந்தும், நார்வேயைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் மேக்னஸ் கார்ல்சென்னும் மோதுகின்றனர். அண்ணாசாலையில் உள்ள ஹயாத் நட்சத்திர ஓட்டலில், 9ம் தேதி முதல் 26ம் தேதி வரை போட்டிகள் நடைபெறுகின்றன. இதற்கான தொடக்க விழா, இன்று மாலை 4 மணிக்கு ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடக்கிறது. இதில் முதல்வர் ஜெயலலிதா கலந்து கொண்டு போட்டியை முறைப்படி தொடங்கி வைக்கிறார்.
ஆனந்த் , கார்ல்சென் மோதும் முக்கிய போட்டி, 12 சுற்றுகளை கொண்டது. 9ம் தேதி முதல் சுற்று போட்டியும், 10, 12, 13, 15, 16, 18, 19, 21, 22, 24, 26 ஆகிய தேதிகளில் மற்ற சுற்று போட்டிகளும் நடைபெற உள்ளன. இருவரும் சமநிலை மதிப்பெண்ணுடன் இருந்தால் 28ம் தேதி டைபிரேக்கர் ஆட்டம் நடக்கும்.
இன்று தொடங்கும் இப்போட்டியில், உலக செஸ் போட்டியில், 5 முறை உலக சாம்பியன் பட்டத்தை வென்றவரும், இந்திய கிராண்ட் மாஸ்டருமான விஸ்வநாதன் ஆனந்தும், நார்வேயைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் மேக்னஸ் கார்ல்சென்னும் மோதுகின்றனர். அண்ணாசாலையில் உள்ள ஹயாத் நட்சத்திர ஓட்டலில், 9ம் தேதி முதல் 26ம் தேதி வரை போட்டிகள் நடைபெறுகின்றன. இதற்கான தொடக்க விழா, இன்று மாலை 4 மணிக்கு ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடக்கிறது. இதில் முதல்வர் ஜெயலலிதா கலந்து கொண்டு போட்டியை முறைப்படி தொடங்கி வைக்கிறார்.
ஆனந்த் , கார்ல்சென் மோதும் முக்கிய போட்டி, 12 சுற்றுகளை கொண்டது. 9ம் தேதி முதல் சுற்று போட்டியும், 10, 12, 13, 15, 16, 18, 19, 21, 22, 24, 26 ஆகிய தேதிகளில் மற்ற சுற்று போட்டிகளும் நடைபெற உள்ளன. இருவரும் சமநிலை மதிப்பெண்ணுடன் இருந்தால் 28ம் தேதி டைபிரேக்கர் ஆட்டம் நடக்கும்.
போட்டியில் வெல்பவருக்கு, மொத்த பரிசுத்தொகையான 14 கோடியில் 60 சதவீதம் (சுமார் 8.5 கோடி) வழங்கப்படும்.
சாம்பியன்களின் வரலாறு
* ஆனந்த் , கார்ல்சென் இருவரும் இதுவரை 62 போட்டிகளில் மோதியுள்ளனர். ஆனந்த் 15 முறையும் கார்ல்சென் 11 முறையும் வெற்றி பெற்றுள்ளனர். 36 ஆட்டம் சமனில் முடிந்துள்ளது.
* இப்போதைய உலக செஸ் சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்த், 2000ம் ஆண்டில் முதல் முறையாக வும் அதன்பின்னர் 2007, 2008, 2010, 2012 பட்டத்தை வென்றுள்ளார்.
* 1948ல் இருந்து 1993 வரையில் உலக செஸ் கூட்டமைப்புதான் போட்டிகளை நடத்தும் அங்கீகாரப்பூர்வ அமைப்பாக இருந்தது. இதற்கு பின்னர் காஸ்பரோவ், தனியாக தொழில்ரீதி செஸ் சங்கம் என்ற பெயரில் புதிய போட்டி சங்கத்தை தொடங்கி போட்டிகளை நடத்தினார். 2006ல் மீண்டும் ஒன்றானது.
0 comments