கடலாடி அருகே தொழிலாளி அடித்துக் கொலை
முதுகுளத்தூர், செப். 19:
இராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அருகே உள்ள தேவர்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் உத்தமநாதன் (வயது 35). இவர் கேரளாவில் கூலி வேலை செய்து வருகிறார்.
இவரது மனைவி மீனாள். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். நேற்று உத்தமநாதன் கேரளாவில் இருந்து ஊருக்கு வந்துள்ளார்.
மாலையில் அவருக்கும் மனைவி மீனாளுக்கும் குடும்பத்தகராறு ஏற்பட்டுள் ளது. அப்போது அதே பகுதியில் வசிக்கும் மீனாளின் தம்பி முத்துதவசி அங்கு வந்து தட்டிக்கேட்டுள்ளார்.
அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் முத்துதவசி ஆத்திரம் அடைந்து உத்தம நாதனை கம்பால் தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த அவர், சிகிச்சைக்காக இராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி இன்று அதிகாலை உத்தமநாதன் பரிதாபமாக இறந்தார்.
இதனை தொடர்ந்து கடலாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் பிச்சையா, இளம் செம்பூர் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து முத்து தவசியை கைது செய்தனர்.
0 comments