நடிகர் ஜெயப்பிரகாசுடன் இணைத்து அவதூறு பரப்புவதா?
நடிகை லட்சுமிராமகிருஷ்ணன் ஆவேசம்
நடிகர் ஜெயப்பிரகாசுடன் தன்னை இணைந்து அவதூறு பரப்பப்பட்டு உள்ளது என்று நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
‘பசங்க’ படத்தில் ஜெயப்பிரகாஷ் வாத்தியார் வேடத்தில் நடித்து பிரபலமானார். ‘எதிர்நீச்சல்’, ‘சென்னையில் ஒரு நாள்’, ‘கழுகு’, ‘மங்காத்தா’, ‘மெரினா’ போன்ற படங்களில் வில்லன் மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார்.
லட்சுமி ராமகிருஷ்ணன், டைரக்டு செய்துள்ள ‘ஆரோகணம்’ படத்திலும் வில்லனாக வந்தார். லட்சுமி ராமகிருஷ்ணன் பல படங்களில் அம்மா மற்றும் அண்ணி வேடங்களில் நடித்துள்ளார். ‘சென்னையில் ஒரு நாள்’ படத்தில் ஜெயப்பிரகாசும், லட்சுமி ராமகிருஷ்ணனும் ஜோடியாக நடித்தனர்.
இந்த நிலையில் இருவரையும் இணைத்து இணைய தளத்தில் செய்தி வந்துள்ளது. இதற்கு பதில் அளித்து லட்சுமிராமகிருஷ்ணன் அவரது டுவிட்டரில் கூறி இருப்பதாவது:–
ஜெய்பிரகாசும் நானும் இணைந்து வாழ்வதாக அவதூறு பரபரப்பட்டு உள்ளது. இது எனக்கு மனவேதனை அளிக்கிறது. இந்த வயதில் காதல் எனக்கு தேவையா? எனக்கு கணவர் இருக்கிறார். காதல் அவர்மேல்தான் வரும். இந்த அவதூறை பரப்பியவர் யார் என்பது தெரியும் என்று குறிப்பிட்டு உள்ளார்.
0 comments