கீழக்கரை முகம்மது சதக் என்ஜினீயரிங் கல்லூரியில்
இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி
இராமநாதபுரம், ஆக. 7:–
கீழக்கரை முகம்மது சதக் பொறியியல் கல்லூரியில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கீழக்கரையில் உள்ள முகம்மது சதக் என்ஜினீயரிங் கல்லூரி வளாகத்தில் நடந்த இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சிக்கு முகம்மது சதக் அறக்கட்டளையின் தலைவர் எஸ்.எம்.யூசுப் சாகிப் தலைமை தாங்கினார்.
கீழக்கரை சதக் அறக்கட்டளை கல்லூரிகளின் இயக்குனர் எஸ்.எம்.ஏ.ஜே. ஹபீப் முகம்மது சதக்கத்துல்லா, சென்னை சதக் அறக்கட்டளை கல்லூரிகளின் இயக்குனர் ஹமீது இப்ராகிம் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் முகம்மது ஜசஹபர் வரவேற்றார்.
முகம்மது சதக் அறக்கட்டளையின் தலைவர் யூசுப் சாகிப் பேசியதாவது:–
அனைத்து மதங்களும் தானம், தர்மம் செய்தால் சொர்க்கம் செல்லலாம் என கூறுகிறது. அதிலும் இந்த ரமலான் மாதத்தில் ஒருவர் தானம் செய்தால் அது 70 மடங்கு கூடுதலாக நன்மையை கிடைக்க செய்யும். நோன்பின்போது மனதை கட்டுப்படுத்தி, ஒருநிலைப்படுத்தி பசி, தாகம், இச்சைகளை கட்டுப்படுத்தி தரும் என்றார்.
இந்நிகழ்ச்சியில் முகம்மது சதக் அறக்கட்டளையின் உறுப்பினர்கள் உசேன், சதக் தம்பி, முகம்மது சதக் பாலிடெக்னிக் முதல்வர் பேராசிரியர் அலாவுதீன், செய்யது ஹமீதியா மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர் அபுல் ஹசன், நூருல் தபீஸ், மற்றும் துறைத்தலைவர், பேராசிரியர்கள், விரிவுரை யாளர்கள், அலுவலக பணியாளர், மாணவ–மாணவியர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரியின் தொடர்பு அதிகாரி நஜ்முதீன், துறைத்தலைவர்கள் ஷேக்பரீத், முகம்மது விஜயராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.
முகம்மது சதக் அறக்கட்டளையின் தலைவர் யூசுப் சாகிப் பேசியதாவது:–
அனைத்து மதங்களும் தானம், தர்மம் செய்தால் சொர்க்கம் செல்லலாம் என கூறுகிறது. அதிலும் இந்த ரமலான் மாதத்தில் ஒருவர் தானம் செய்தால் அது 70 மடங்கு கூடுதலாக நன்மையை கிடைக்க செய்யும். நோன்பின்போது மனதை கட்டுப்படுத்தி, ஒருநிலைப்படுத்தி பசி, தாகம், இச்சைகளை கட்டுப்படுத்தி தரும் என்றார்.
இந்நிகழ்ச்சியில் முகம்மது சதக் அறக்கட்டளையின் உறுப்பினர்கள் உசேன், சதக் தம்பி, முகம்மது சதக் பாலிடெக்னிக் முதல்வர் பேராசிரியர் அலாவுதீன், செய்யது ஹமீதியா மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர் அபுல் ஹசன், நூருல் தபீஸ், மற்றும் துறைத்தலைவர், பேராசிரியர்கள், விரிவுரை யாளர்கள், அலுவலக பணியாளர், மாணவ–மாணவியர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரியின் தொடர்பு அதிகாரி நஜ்முதீன், துறைத்தலைவர்கள் ஷேக்பரீத், முகம்மது விஜயராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.
0 comments