கிரானைட் கொள்ளையை வெளிச்சம் போட்டுக் காட்டிய
மதுரை கலெக்டர் அன்சுல் மிஸ்ரா திடீர் இடமாற்றம்!
பின்னணியில் ஆளும் கட்சி ?
சென்னை:
மதுரை மாவட்டத்தின் புதிய கலெக்டராக எல்.சுப்பிரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை கலெக்டராக இருந்த அன்சுல் மிஸ்ரா வணிக வரித்துறைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கலெக்டராக இருந்த சகாயத்தைத் தொடர்ந்து மதுரை கிரானைட் கொள்ளையை வெளிச்சம் போட்டுக் காட்டி அந்தக் கும்பலை கதிகலங்க வைத்தவர் மிஸ்ரா. அதே போல ஆளும் தரப்பினரின் நெருக்கடிகளுக்கும் வளைந்து கொடுக்காமல் இருந்து வந்தார்.
இந் நிலையில் அவரை அங்கிருந்து தூக்க ஆளும் தரப்பைச் சேர்ந்தவர்களே தீவிர முயற்சியில் இறங்கினர். அதையும் மீறி இத்தனை நாட்களாக மதுரை கலெக்டராக நீடித்து வந்தார் மிஸ்ரா.
இந்நிலையில் தமிழக ஐஏஎஸ் அதிகாரிகள்
சிலரை பணியிடமாற்றம் செய்து
தமிழக அரசு இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
தர்மபுரி மாவட்ட ஆட்சியராக இருந்த லில்லி, வணிக வரித்துறை இணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக கே.விவேகானந்தன் தர்மபுரி மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
திருவண்ணாமலை ஆட்சியராக இருந்த விஜய் பிங்களே, சென்னை மாநகராட்சி துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக ஏ.ஞானசேகரன் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மதுரை மாவட்ட கலெக்டராக கடந்த ஓர் ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய அன்சுல் மிஸ்ரா, வணிக வரித் துறை இணை ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
நிதித்துறை (செலவினம்) செயலாளராக டி.உதயச்சந்திரனும், காதி மற்றும் கைவினைத் துறை முதன்மை செயலாளராக ஹர்மந்தர் சிங்கும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
0 comments