பெட்ரோல் விலை ரூ.2 வரை உயர்கிறது : வெள்ளிக்கிழமை அறிவிப்பு வெளியாகும்
புதுடெல்லி: பெட்ரோல் விலை ரூ1.50 முதல் ரூ2 வரை உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு கடுமையாக சரிந்து வருகிறது. முன்னெப்போதும் இல்லாத வகையில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ரூ58.56 ஆக குறைந்துள்ளது. இதனால் வெளிநாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்படும்போது, கூடுதல் விலை தர வேண்டிய நிலையில், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் உள்ளன.
தற்போது ரூபாய் மதி ப்பு சரிந்துள்ளதால், எண்ணெய் நிறுவனங்களுக்கு கடந்த 4 வாரத்தில் மட்டும் ரூ20,000 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இச்சூழ்நிலையில், பெட்ரோல் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயத்தில் அவை உள்ளன. பெட்ரோலிய பொருட்களின் விலை சீராய்வு நாளான வரும் 14ம் தேதி நள்ளிரவு முதல் பெட்ரோல் விலையை ரூ1.50 முதல் ரூ2 வரை உயர்த்தலாம் என தெரிகிறது.
தற்போது ரூபாய் மதி ப்பு சரிந்துள்ளதால், எண்ணெய் நிறுவனங்களுக்கு கடந்த 4 வாரத்தில் மட்டும் ரூ20,000 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இச்சூழ்நிலையில், பெட்ரோல் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயத்தில் அவை உள்ளன. பெட்ரோலிய பொருட்களின் விலை சீராய்வு நாளான வரும் 14ம் தேதி நள்ளிரவு முதல் பெட்ரோல் விலையை ரூ1.50 முதல் ரூ2 வரை உயர்த்தலாம் என தெரிகிறது.
0 comments