தே.மு.தி.க. மாநில மாநாடு:
இராமநாதபுரம் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
இன்று மாலை நடக்கிறது
இராமநாதபுரம், ஜன. 20:
தே.மு.தி.க.வின் ஊழல் எதிர்ப்பு மாநாடு வருகிற 2–ந் தேதி விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர் பேட்டையில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டை சிறப்பாக நடத்துவது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உத்தரவின்படி மாவட்டந் தோறும் நடைபெற்று வருகிறது.
அதன்படி இம்மாநாடு குறித்த இராமநாதபுரம் மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தே.மு.தி.க. சார்பில் இன்று மாலை ராமநாதபுரம் பாரதி நகரில் உள்ள ஏ.பி.சி. திருமண மகாலில் நடைபெற உள்ளது.
இதில் தே.மு.தி.க பொருளாளர் இளங்கோவன் கலந்து கொண்டு மாநாட்டை சிறப்பாக நடத்துவது, மாவட்டத்தில் இருந்து திரளான தொண்டர்களை அழைத்து செல்வது குறித்து சிறப்புரையாற்றுகிறார்.
மேலும் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் கட்சியை வலுப்படுத்துவது தொடர்பாகவும், தே.மு.தி.க. வேட்பாளர்களின் வெற்றிக்கு பாடுபடுவது தொடர்பாகவும் அவர் ஆலோசனைகளை வழங்குகிறார்.
மேலும் இக்கூட்டத்தில் மாநில மீனவரணி செயலாளர் முருகநாதன், இராமநாதபுரம் மாவட்ட செயலாளர் சிங்கை ஜின்னா மற்றும் மாவட்ட அவைத்தலைவர் மணிமாறன், மாவட்ட துணை செயலாளர் கிரீன் இப்ராகிம், முன்னாள் மாவட்ட செயலாளர் ஒவியர் சரவணன், மாவட்ட இளை ஞரணி துணை செயலாளர் சண்முகம், மண்டபம் ஒன்றிய செயலாளர் பூமிநாதன், மாவட்ட பொருளாளர் ராமேசுவரம் திலீப்காந்த் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசுகிறார்கள்.
ஆலோசனைக் கூட்டத்துக்கு வருகை தரும் நிர்வாகிகளை வரவேற்று இராமநாதபுரம் தே.மு.தி.க. நகர் செயலாளர் முக்தீஸ்வரன் பல்வேறு இடங்களில் பிளக்ஸ் போர்டுகளை வைத்துள்ளார்.
தே.மு.தி.க. மாநில மாநாடு குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் கட்சியின் நிர்வாகிகள், மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொள்ள வேண்டும் என மாநில மீனவரணி செயலாளர் முருகநாதன், மாவட்ட செயலாளர் சிங்கை ஜின்னா ஆகியோர் கேட்டுக் கொண்டு உள்ளனர்.
0 comments