டெல்லி சட்டபேரவை:
நம்பிக்கை வாக்கெடுப்பில் அரவிந்த் கெஜ்ரிவால் அரசு வெற்றி
புதுடெல்லி:
புதுடெல்லி சட்டமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இதில் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். சபை கூடியதும் தற்காலிக சபாநாயகர் தேர்வு நடைபெற்றது. காங்கிரஸ் உறுப்பினர் மதின் அகமது தற்காலிக சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டார்.
இதைத்தொடர்ந்து முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் உள்பட அனைத்து உறுப்பினர்களுக்கும் தற்காலிக சபாநாயகர் மதின் அகமது எம்.எல்.ஏ.க்களாக பதவி பிரமாணம் செய்து வைத்தார். கூட்டத்தொடரின் 2-வது நாளான இன்று முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கு கோரினார்.
புதுடெல்லி சட்டமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இதில் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். சபை கூடியதும் தற்காலிக சபாநாயகர் தேர்வு நடைபெற்றது. காங்கிரஸ் உறுப்பினர் மதின் அகமது தற்காலிக சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டார்.
இதைத்தொடர்ந்து முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் உள்பட அனைத்து உறுப்பினர்களுக்கும் தற்காலிக சபாநாயகர் மதின் அகமது எம்.எல்.ஏ.க்களாக பதவி பிரமாணம் செய்து வைத்தார். கூட்டத்தொடரின் 2-வது நாளான இன்று முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கு கோரினார்.
இதில் 70 உறுப்பினர்கள் கொண்ட டெல்லி சட்டபேரவையில் 36 உறுப்பினர்களின் ஆதரவோடு நம்பிக்கை வாக்கெடுப்பில் அரவிந்த் கெஜ்ரிவால் வெற்றி பெற்றார்.நம்பிக்கை வாக்கெடுப்பில் 8 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ஆதரவுடன் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடதக்கது.
0 comments