பரமக்குடி, ஜன. 19:
பரமக்குடி பாரதிநகர் மேற்கு பகுதியை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் நெர்லிஸ் (வயது 15), தூத்துக்குடியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தான். விடுதியில் தங்கி படித்து வந்த நெர்லிஸ் பொங்கல் விடுமுறைக்காக ஊருக்கு வந்தான். பின்னர் 16–ம் தேதி பள்ளி விடுதிக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு புறப்பட்டுள்ளான்.
ஆனால் அவன் குறிப்பிட்டபடி பள்ளிக்கு செல்லவில்லை. இதுகுறித்து பெற்றோருக்கு தெரிய வந்ததும், நண்பர் மற்றும் உறவினர் வீடுகளில் தேடினர். ஆனால் மாணவன் நெர்லிஸ் பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இதனைத் தொடர்ந்து அவனது தந்தை முருகன், பரமக்குடி டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவன் நெர்லிசை தேடி வருகின்றனர். சமூக வலைத்தளங்கள் மூலமும் மாணவனை தேடும் பணி நடைபெற்று வருகிறது.
0 comments