சூதாட்டப் புகார்:
3 வீரர்களுக்கு ஆயுள் தண்டனை அல்ல.,
வாழ்நாள் தடை?
புதுடில்லி:
கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டு சிறையில் இருந்து வரும் ஸ்ரீசாந்த் , சவான், அஜீத் சண்டோலியா ஆகிய 3 பேரும் ஜாமினில் வெளியே விடும்படி மனுத்தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு மீதான விசாரணை இன்று கோர்ட்டில் நடக்கிறது.
தேச விரோத தாதாக்களுடன் தொடர்பு வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் படி மகாராஷ்டிர பாதுகாப்பு சிறப்பு சட்டம் பாய்ந்துள்ளது. இதனால் இவர்களுக்கு ஜாமின் கிடைக்க வாய்ப்பில்லை என சட்ட நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் அவருக்கு கிரிக்கெட்டில் இருந்து விலக்கிடும் ஆயுள்கால தடை விதிக்க கிரிக்கெட் ஒழுங்கு முறை அமைப்பு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
ஹோட்டல் அதிபர் விக்ரம் :
இதற்கிடையில் சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு ஆஜராகாமல், தொடர்ந்து இழுத்தடிப்பு செய்து வரும் ஹோட்டல் அதிபர் விக்ரம் அகர்வால், இன்று சென்னை சி.பி.சி.ஐ.டி போலீசார் முன்பு ஆஜராகியுள்ளார். மேட்ச் பிக்சிங் மற்றும் சூதாட்டம் தொடர்பான விவகாரத்தில், குருநாத் மெய்யப்பனிற்கும் மற்றும் விண்டூ தாரா சிங்கிற்கு இணைப்புப் பாலமாக செயல்பட்டது மற்றும் கிரிக்கெட் புக்கி கிட்டிக்கு இடவசதி செய்துகொடுத்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்கு, ஹோட்டல் அதிபர் விக்ரம் அகர்வால் ஆளாகியுள்ளார். நேரில் ஆஜராக அவருக்கு சென்னை சி.பி.சி.ஐ.டி. சமீபத்தில் சம்மன் அனுப்பியது. ஆனால், அவர் ஆஜராகவில்லை. இன்று ஆஜரானார்.
ராஜஸ்தான் அணிக்கு தடை:
இதற்கிடையில் ராஜஸ்தான் ராயல் அணி உரிமையாளர் குந்த்ரா மற்றும் ஷில்பாஷெட்டி மீதும் சூதாட்ட புகார் உள்ளது. இதனால் இந்த அணியை இந்தியன் பிரிமியல் லீக்கில் இருந்து விலக்குவது தொடர்பாகவும் இன்று நடக்கும் பி.சி.சி.ஐ., கூட்டத்தில் முடிவு செய்யப்படுகிறது.
0 comments